"ஷிம்ஹோ சிஸா சஷ்ச்தத்தா ஷம்னா
சிரிஷ்ஷச்த்த சின்ஷியாரி ஷய் ஷக்தே"
ஞானம் என்றால் என்ன என்று நீங்கள் தெரிந்துக்கொண்டால்தானே. ஞானத்தின் இன்பத்தை அனுபவிக்கமுடியும்,
தாங்களாகவே வடிவமைத்த யோக செய்முறையை (ப்ராடைக்ட்) மக்களுக்கு பரப்புவதே இவர்கள் பெற்ற(?) ஞானத்தின் குறிக்கோள், ஏழைகளுக்கு ஞானத்தின் பாதையில் கூட இடம் கிடைப்பது குறைவுதான், டாலர்கள், ஈரோக்கள் மாதாம் மாதம் காட்டும் பொழுதுதான் ஞானத்தின் பாதை வாழ்வின் இறுதிவரை கிடைக்கும் ( ஞானம் கிடைக்காது என்பது வேறு விசயம்), பொருளாதரத்தை நோக்கி ஓடும் அவசர வாழ்வில் மனவழுத்தம் என்பதுதவிர்க்கமுடியாத ஒன்று, அதை தவிர்ப்பதுக்காக/குறைப்பதற்காக சந்தையில் கிடைக்கும் யோக ப்ராடைட்டுகளை நம்பி மக்கள் செல்லவேண்டி உள்ளது. ப்ராடைக்ட் வேலை செய்யும் பொழுது ப்ரடைக்டை விற்பவர் கடவுளாகிறார், ப்ரடைக்டுகள் வேலைசெய்வதை ஆயிரம் பக்கத்தில் இந்த ஆசான்கள் விளக்கினாலும் அதன் அடிப்படை தத்துவம் ஒன்றுதான் அது "நம்பிக்கை".
காவியுடையில் முதல் வரியில் எழுதிருப்பது போல புரியாத(புரியாத மொழியில் ) அல்லது வெகு சிலருக்கே புரியும் வசனங்களை பேசி கைவிரல்களை ஒருதினுசாக வளைத்து விரல் நாட்டியம் ஒரு நிமிடம் நடத்திவிட்டு, நான் எப்படி ஞானம் அடைந்தேன் என்று தன் இமையமலை வரலாறை அல்லது ஏதாவது மலையில் வாழ்ந்த வரலாறை கூறி தானும் இந்த உலகமும் வேறல்ல என்ற நிகழ்வை(?) கூறும்பொழுதே மக்களுக்கு பாதிக்கு மேல் நம்பிக்கை வந்துவிடும், அவர் மகானாக பார்க்கபடுவார், பிறகு அவர் வாக்கே வேதமாகும், இப்பொழுது அவர் ப்ராடைக்டை அவர்கள் முழு மனதுடன்/ நம்பிக்கையுடன் ஏற்றுக்கொண்டு பயிற்சி செய்யும் பொழுது அது வேலை செய்வதாக தோன்றும், வேலைசெய்வது நம் நம்பிக்கைதான். பலரும் அவரது மனபாரத்தை இறக்கிவைக்கத்தான் நேரம்/ஆள் தேடுகின்றனர். அதற்க்கு இந்த ஆசான்கள் கிடைக்க அவர்கள் மீது பாரத்தை இறக்கிவைத்துவிட்டு (எண்ணத்தால் இறக்கிவைத்துவிட்டு) மனம் லேசாக உணர்கின்றனர். மனமே அனைத்துக்கும் காரணி என்று உணருபவர்களுக்கு எந்த ஊன்றுகோலோ அல்லது பிடிமானமோ தேவைப்படாது. அதாவது இந்தவகை ப்ராடைக்டுகள் அல்லது ஆசான்கள் தேவைபடாது.
கடவுள் படத்துக்கு பதிலாக தன் படத்தையோ அல்லது தன் முன்னோர் படத்தையோ வைத்து வழிபட்டாலும் ஒரே விளைவைத்தான் கொடுக்கும் என்ற எண்ணம் மனதில் தோன்றினாலே உங்கள் மனதின் மறுப்பக்கம் தெரிய ஆரம்பிக்கும், சந்தையில் கிடைக்கும் யோகவகை ப்ராடைக்ட்டுகளை உபயோகிப்பதும் உபயோகிக்காமல் இருப்பதும் அவர் அவர் விருப்பம்,
(ஆ) தொடக்கத்தில் குறிப்பிட்டுள்ள இரண்டு வரிகள் (புரியாத) மகான் ஸ்ரீ ல ஸ்ரீ பித்தானந்த பித்தன் சுவாமிகள் அருளிய பித்தபுரானத்திலிருந்து எடுக்கப்பட்டது.
(இ) தந்திரம் கற்கவேண்டும் (மோதிரம் எடுப்பது, கையிலிருந்து விபூதி வரவழைப்பது, நாக்கிலிருந்து லிங்கம்) என்று விருப்பபடுபவர்கள் மூன்று , ஆறுமாத டிப்ளமோ கோர்ஸ் சேரலாம்.