ஜெயகாந்தன் என்னும் அதிமேதாவி

தொடக்க காலத்தில் கம்யூனிஸ்ட் என்ற கோமணத்தை கட்டிக்கொண்டு, பல படைப்புக்களை தமிழில் கொடுத்த ஜெயகாந்தான், சமஸ்கிருத சபா ஒன்றில், தமிழை மிகக் கடுமையாக விமர்சித்தார், தமிழ் தமிழ் என்று பேசுபவர்கள் நாய்கள் என்ற ரீதியில் பேசினார் அக் கூட்டத்தில் சமஸ்கிருதத்தை மிக உயர்வாகப் புகழ்ந்து பேசினார்.

பிறகு அதற்க்கு மிக கடுமையாக எதர்ப்பு கிளம்ப, அடுத்த சில நாட்களில் நடந்த ஒரு கூடத்தில் பின்வருமாறு கூறினார்.

"எனக்கு தமிழ் தான் தெரியும் வேறு மொழி தெரியாது. தொட்டிலில் குழந்தையாக தவழ்ந்தபோதே எனக்குத் தமிழ் தெரிந்தது. எனது தாய் தமிழில் தாலாட்டியதால் தமிழ் அறிந்தேன். இந்தியாவைச் சேர்ந்த தமிழன் என்று கூறிக் கொள்ளவே ஆசைப்படுகிறேன் நான், அத்தோடு எனது கருத்து மற்றவர்களின் மனதை புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்கிறேன் ஆனால் எனது கருத்தில் எந்த மாற்றமும் கிடையாது என்றார்".

இது நிகழ்ந்து நெடு நாட்கள் ஆகிருந்தாலும், ஞான பீடம் விருது வாங்கிய அய்யா கிட்ட சில கேள்விகள் கேட்கணும்.

1.மொழிகள்ல உயர்வு, தாழ்வு பாமரன் கூட பாக்ககூடாது, இதுல பெரிய பெரிய விருதுஎல்லாம் வாங்கின எழுத்தாளர் நீங்க பாக்கலாமா?.

2.எழுதுவதினால் நான் மேன்மையடைகிறேன், என் மொழி(தமிழ்) மேன்மை அடைகின்றதுனு சொன்ன நீங்க, உங்கள மேன்மையடைய வச்ச மொழிய தாழ்வா பேசலாமா?

3. தமிழ் தமிழ் என்று பேசுறவன் நாய்னா, தமிழ்ல எழுதின நீங்க யாரு ?

4.தமிழை வச்சி உலகத்த தெரிஞ்சிகிட்டவன். தமிழ் தமிழ் நு சொல்லாம உங்க பேரவா சொல்லுவான் ? (தமிழ்ல வச்சி பொழப்பு நடுத்து அரசியல்வாதிகள் தவிர)

5.தமிழ் மொழி மட்டும் தெரிஞ்ச நீங்க, சமஸ்கிருதத்த எத வச்சி உயர்வா பேசினிங்க?. எப்படி ஒப்பிட்டிங்க?.

படிக்காத புத்தகத்திற்கு விமர்சனம் எழுதுற மாதரி, தெரியாத மொழியை உயர்த்தியும், தெரிந்த ஒரே மொழியை தாழ்த்தியும், பேசி உயர்ந்த மொழி மற்றும் தாழ்த்த மொழியை கண்டுபிடித்த, ஞானபீடம் விருது வாங்கிய அய்யா அவர்களுக்கு "அதிமேதாவி" என்ற பட்டத்தை எங்கள் கடையின் சார்பாக வழங்குகிறோம்.

1 comments:

M.S.E.R.K. said...

நன்றாக சொன்னிர்கள். யாராக இருந்தால் என்ன? தமிழால் பிழைத்து, பின்பு தமிழை பழிக்கும் இவர்களை இனம்காண வேண்டும்.