ஜோதிட கவிதைகள் ( எதிர்பதிவு)

*******



இன்னைக்கு இவரோடது ( அங்க தொட்டு இங்க தொட்டு கடைசீல, கர்த்தரே என்னை மன்னியுங்கள்)

********



சரக்காயுள்

-------------




இரவுநேர குடி பயணத்தில்

பாதியிலேயே தீர்ந்த சரக்கு

பார் பய்யனை கூப்பிட்டு

ஒரு ஹாப், ரெண்டு சோடா என்றேன்



இப்ப உங்க பர்ஸ் வீக் என்றான்.

கோபத்துடன் காலி பர்ஸ்சை தூக்கியெறிந்தேன்.



என்னை பார்த்து புன்னகைத்த

பார் பய்யன்

காலி பர்ஸ்சை

தூக்கியெறியாதிங்க சார்.

காலி பாட்டிலஎல்லாம் போட்டு

பணத்தை நிரப்பிட்டுவாங்க என்றான்.





பரிகாரம்

------------



பார்ட்டிசரக்கு சரியில்லை

பதினைந்துநூருக்கு பாரின்சரக்கு

வாங்க வேண்டுமாம்.

எந்தபாரின்(நாடு) என சொல்லவில்லை

நண்பன்.



போதையாலஜி

--- ------- --------



என் வீட்டு நாய் குட்டியின் தட்டில்

பீர் கொஞ்சம் சிந்திகிடந்தது.




ஐந்நூறு கொடுத்து சரக்கு பிராண்டை

மாற்றியது மனைவிக்கு பிடிக்கவில்லை.



எதிர்காலம்

--------------



போதையால் உங்கள் எதிர்காலம்

ஏறுமுகம் என்ற பலனை கேட்டதும்

வீட்டுக்கு வந்து சரக்கை காச்சினேன்.

எனக்கு ஆயுள் தண்டணை.

ஜோதிடம் உண்மையோ?





குடிகாரனா சரக்குகடைகாரனா

---------------------------------------



போதையின் ஆயுளை சொல்ல

வந்த ஜோதிடரை - உனக்கு போதையபத்தி தெரியுமா

என கிண்டலடித்த காட்சியை கண்டு

மகிழ்ந்தான் குடிகாரன் .



ஜோதிடர் சொன்ன ஒரு மணிநேரத்தில் போதை இறங்கியதை

நினைத்து மகிழ்ந்தான் சரக்குகடைக்காரன்.





குடி வாழ்க்கை

-------------------



பல பிராண்டுகள் உங்களுக்கு

போதையேற்ற இருக்கு

உங்கள் குடிவாழ்க்கையில்

பிரச்சனை வர வாய்ப்பில்லை

என்ற சரக்குகடைகாரருக்கு தெரியுமா

பிராண்டுகள் ஒன்றுக்கு ஒன்று

வியாபார போட்டி என்று
.





*********

இங்கன படிசிபோடுங்க முதல ( அவரே வந்து மாடிகிட்டாறு)

*********



சரக்கு தொலைத்த இரவுகள்





இன்னமும் அந்தி சாயவில்லை,

அதற்குள்,

சரக்கு பாட்டில் அவன் கைகளில்

கெட்டியமாக பிடிபட்டுகிடந்தது..!



இது

நேற்றைய சரக்கின் மிச்சமா..?

இல்லை,

இரவில் என்னுடன்

அடித்ததன் சொச்சமா..?



மதிய உணவு முடித்து,

அவன் கையில்

இருந்த சரக்கை குடிக்கும்பொழுது உணர்ந்திருப்பாண் ,

இன்றும் அரைபாட்டில்தான் என்று..

அவன் தானே கொடுத்தான்

சரக்கை..!?



எனக்கு பழக்கமிருக்கிறது

இரவு முழுவதும் கண்விழித்து

சரக்கடித்து ..!

அவனோ ஏழு மணிக்கு இரவு உணவு முடித்து

உடன் சரக்கடித்து கொள்ளும்

சாராயகுடுக்கி ..!



காலம் இணைத்தது எங்களை,

பாட்டில் பிரித்தது

உறக்கத்தை..!



நான் உன் சரக்கை

குடித்தேனா,.?

கேட்டேன் அவனிடம் ..!



இல்லை கண்ணா,

நீ சரக்குபானையை கொடுத்தாய்

என்றான் .



நெகிழ்ந்தேன்

அவன் பதிலைக்கேட்டு..!



சரக்கை இழந்து

சைடிசை தின்பது

அவனுக்கும் பிடித்திருக்கிறது.






3 comments:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

உங்கள் பதிவை எதிர்த்து வால்ப்பையன் தலைமயில் பெரியார் பிறந்த மண்ணில் போராட்டம் நடைபெரும்.
சாக்கிரதை....

வெங்கிராஜா | Venkiraja said...

அந்த மனைவி கவுஜ சான்ஸே இல்லை!
அந்த கவிதையோட ஒரிஜினலும் நல்லா இருந்துச்சுங்கறது வேற விஷயம்!

ஊர்சுற்றி said...

நல்ல கவுஜ...!