பார் தேவதைகள் (எதிர் வினை)
Posted by
வெற்றி-[க்]-கதிரவன்
on Wednesday, July 22, 2009
இங்கன படிச்சிபோட்டு மேல படிக்கவும்
காலவழுகுடி
பையில் பத்து ரூபாயும்
கையில் ஊறுகாயும்
கொண்டாட கொஞ்சம் சுதந்திரமும்
வாய்க்கும் காலநிலையில்
அறிமுகமானது;
மூடியை திறக்க
உலகம் திறக்கும்;
சுவர்களோடு
பேசிக்கொள்ள கற்றுத் தருவாய் ;
அரைமூடி அடிக்காவிட்டாலும்
திருந்திவிட்டாயா என்பாய்
போதையின் சக்கரச் சுழலில்
எழுந்து நிற்கும்முன் சரிந்து விழுவேன்.
காசில்லாத ஒரு நாளில்
பட்டையை அடித்து நெஞ்சி எரிந்து போகும்.
அந்த பாட்டிலில்
நிரப்பபட்டிருக்கும்
அமுதத்தில்
என் நிராசைகள்
நிறைவேறிருக்கும் .
*******
இடவழுவகுடி
நேற்று எதிர்பார்க்கவில்லை
எதிர்பாராத "இன்று" வருமென்று.
ஒவ்வொரு நாளும் வேண்டிக் கொள்வேன்
அந்த "இன்று" மட்டும் வானாளில்
வரவே கூடாதென்று.
எதிர்பார்த்தபடியே
ஏமாற்றாமல் ஒருநாள்
வ்ந்து தொலைத்தது அந்த "இன்று"
சரக்கு கடை வாசலில் .
"வேளா வேளைக்கு ஒழுங்கா குடிக்குறியா?"
"வெயில்ல அலங்ச்சா பீரு குடிகிறாயா ?"
"குடல் நல்லா இருக்கா?"
"நுரையீரல் சுகமா ?"
"இப்பவும் மிட்நைட்டுல பார தேடுறியா ?"
"எப்படிடா இருக்க?"
"போதையோடு இருக்கியா?"
"என்ன மறந்துட்டியா?"
"இல்ல இப்பவும் தெரியாம குடிகுரியா ?"
மிக்சிங்கும், சைடிசும்
அருகில் இருக்க
கேட்க நினைத்த அனைத்தையும்
ஒற்றை நொடியில் வலிகளோடு
அலைபோல ஆடி கேட்டு முடித்தாய்.
உடனே
உன்னை ஒருவன் அறுபது ருபாய் கொடுத்து
வாங்கி சென்றுவிட்டான்.
குறிப்பு : கோட்டர் விலை தெரியவில்லை, சரியான விலையை பினூட்டத்தில் தெரிவிக்கவும்
2 comments:
:) இது பேரு தேடலா ?
அவ்வ்வ்வ்வ்வ்வ்
ரைட்டு..சரக்கு விலை தெரியாதுன்னு சொல்லிட்டு கரைக்ட்டா 60 ரூபாய்ன்னு எழுதியிருக்க?
Post a Comment