டமில்டுமில் - கருத்து - எதிர்வினை

*
சப்பாத்தி மாஸ்டராக இருக்கும் டமில்டுமில் அனைவரும் கட்டாயம் சப்பாத்தி சாபிடவேண்டும். அவர் அவர் அவரது உணவை நன்றாக உண்கின்றனர் ஆனால் சப்பாத்தியை சாபிடமாட்டேன்கிறார்கள். அதனால் அனைவரும் கண்டிப்பாக சப்பாத்தியை சாபிடவேண்டும் என்று கூறுகிறார். சப்பாத்தி சங்கத்தின் முதல் தலைவரே அனைவரும் சப்பாத்தி சாப்பிடுங்கள் என்று கூறவில்லை அனால் வரது போறது எல்லாம் இப்படி சொல்ல என்ன காரணம் என்று தெரியவில்லை. மற்ற உணவுகளை இந்த மா மனிதர்கள் சாப்பிடமாடார்கலாம் ஆனால் மற்றவர்கள் இவர்கள் உணவை சாப்பிடவேண்டுமாம். அதற்க்கு இவர்கள் சொல்லும் காரணம் பெரும்பாலானோர் உண்பது சப்பாத்தி அதனால் மற்றவர்களும் உண்ணவேண்டும் என்று கூறுகின்றனர்.

பெரும்பாலானோர் சாப்பிடவில்லை என்பதற்காக நாமும் சாப்பிடாமலா இருக்கமுடியும் ?. நம் நாட்டில் காக்காத்தான் அதிகம் இருக்கின்றது அதற்காக அதையா நாம் தூக்கிவைத்து கொண்டாடுகிறோம்?. அவர்கள், அவர்கள் உணவை மற்றவர் திங்கவேண்டும் என்று எதோ சர்வதிகார தோணியில் சொல்கின்றனர். இந்த இழவுக்குதான் கடை ஆரம்பிச்சவுடன் எங்க கூடவே இருக்கன்னு சொன்னது ?. அவர்கள் உணவையே எங்கள் மீது திணிக்கும் நபர்கள்தான் எங்களுக்கு கடையில் வேலை செய்ய சம உரிமை கொடுப்பார்கள் ?. ஹோட்டலில் எத்தனை சீப் குக்குகள் இட்லியோ அல்லது இடியாப்பமோ தின்பவர்கள் வந்திருக்கிறார்கள் சற்று யோசிக்கவும்? அல்லது இனிமேல் வருவதற்கு வாய்புகள் இருக்கின்றதா ? வாரிசு குக்குகள் மட்டுமே இனிமேல் சீப் குக்காக வர வாய்புள்ளது. கூறு கெட்ட குப்பன்கள் வேண்டுமென்றால் இன்று சப்பாத்தியை சாப்பிட்டுக்கொண்டு அவர்கள் அடையாளங்களை அளித்துக்கொண்டிருகிறார்கள். எந்த விதத்தில் என் இட்லியோ அல்லது பொங்கலோ கெட்டுபோகிவிட்டது.

சப்பாத்தி சங்கத்தின் நோக்கம் புரியாமல் நான் வெளிநாடு வந்தவுடன் இங்கு சப்பதிதான் கிடைக்குது, இட்லி வடை கிடைக்கவில்லை, எல்லாம் உங்களமாதரி ஆளுங்களாலதான் இன்னைக்கு கஷ்டப்பட்டு சப்பாத்தி சாபிடுறேன், அங்கேயே சாப்பிட்டு பழக்கம் இருந்தால் இந்த தொல்லை இல்லை என்று கூப்பாடு போடுகின்றனர். உங்களை யாராவது சட்டையை பிடித்து இட்லி மட்டும் சாப்பிடுங்கள் என்று கூறினார்களா ? சப்பாத்தி கிடைக்கும் நாட்டுக்குத்தான் போகபோகிறிர்கள் என்றல் சப்பாத்தி சாப்பிட கற்றுக்கொள்ளாதது யார் தவறு ?.

இவர்கள் உக்காந்த இடத்துல இருந்தே நோகாம நோம்பி எடுக்கனுமாம் அதுக்காக அனைவரும் சப்பாத்தி சாபிடவேண்டுமாம். இந்த கருமத்துக்கு பர்கரா திண்ண கத்துகிட்டா எந்தநாட்டுக்கு சென்றாலும் (பெரும்பாலான) பிரச்சனை இல்லை என்றால். குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டும் இவர்கள் அடுத்தவர்களை பார்த்து குண்டு சட்டிக்குள் குதிரை ஒட்டுகுறிர்கள் என்கிறார்கள் இந்த அறிவாளிகள். இன்னும் ஒரு கூட்டம் சப்பாத்தி சாப்பிட்டா எதோ ஊருக்கே படி அளக்கலாம் என்பது போல கூறுவது வாடிக்கையாக வைத்திருகிறார்கள். ஒரு கடை வைக்கவேண்டும் என்றால் பலவகையான உணவுகள் உண்பவர்களை வைத்து ஒரு கடை வைக்க ஆசை மட்டும் வைத்தால் எப்படி ? அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து நடக்க வேண்டும் அதற்க்கு வக்கில்லை என்றால் என்ன இழவுக்கு அனைவரையும் சேர்த்தார்கள் என்று தெரியவில்லை, இவர்களே கடையை நடத்தவேண்டும் மற்றவர்கள் கைகட்டி நடக்கவேண்டும் இவர்கள் சர்வாதிகார போக்கில் கடையை நடத்துவார்கள் ஆனால் இதை எல்லாம் எதிர்த்து கேட்டால் கடையின் முறையாண்மைக்கு எதிராக கேள்வி கேட்கின்றார்கள் என்று மிரட்டுவார்கள்.

ஒரு பெரிய கடை கீழ் அனைத்து வகையான உணவுகளும் வைத்து கொள்வது நல்லது அதற்க்கு தகுந்தாற்போல் அனைவரின் உரிமையையும் உணர்வுகளையும் மதிக்கதெரிந்தால் தான் அது ஒரு நல்லகடையாக அமையும். அதவுட்டுபுட்டு சப்பாத்தி சாப்பிடு என்று நேரம் சாதகமாக இருக்கும் பொழுது கூவுவது எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள இயலாது.

சப்பாத்தி வேண்டும் கண்டிப்பாக சாப்பிடவேண்டும் என்பவர்கள் அவர்களே தேடி சென்று சாபிடுகிறார்கள் எதுவும் புரிஞ்சிக்காத அரவேக்காடுங்க தான் அவன் புள்ளமட்டும் சப்பாத்தி சாப்பிடுது, நம்மள ஏமாத்துரானுக என்று கூவும்... வேணும்ன்னா போய் தின்னுகளே யார் வேணான்னு சொன்னா ? அதவிட்டுபுட்டு எல்லாரும் என்னாத்துக்கு கட்டாயமா தின்னனும்ன்னு சொல்லுரிங்கன்னு தெரியல, எவனாவது நாலுபேரு ஏமாத்திபுட்டானுகன்னு சொன்னா, ஆமா ஏமாதிபுட்டனுகன்னு கன்னமூடிகிட்டு சொல்லுறது... கூவுறதுக்கு முன்னாடி கொஞ்சம் யோசிச்சிட்டு கூவுங்க....
*

ஏதோ ஒன்று

*

மெதுவாக துடித்த
இதயத்தில் அன்று
வேகம்

படிக்கட்டு தொடர்
பயணத்தில் வானில்
பால்நிலா

நின்று கொன்று
கொன்று தின்றது
நித்தம்

ஒருமுறை திரும்ப
பார்க்க திக்கத்த
பயணங்கள்

நடைபயணம்
தூரத்தில் தேநீரகம்
வானில் நிலா.

சிங்கை பதிவர் சந்திப்பு - போட்டோ கமெண்ட்ஸ்

*
23-ஆகஸ்ட்-2009 சிங்கை பதிவர் சந்திப்பு - போட்டோ கமெண்ட்ஸ்













பதிவுலக வாஸ்து மற்றும் ஜோதிட நிபுணர் பித்தன்ஜி

*

பதிவுகளில் ஹிட்ஸ்/ஒட்டு வருவதில்லையா அணுகவும் பதிவுலக வாஸ்து மற்றும் ஜோதிட நிபுணர் பித்தன்.

எனக்கு பதிவுலக வாஸ்து, ஜோதிடம், நேமாலஜி, ப்லாகாலஜி, நுமராலாஜி, அஸ்ட்ராலாஜி போன்ற அனைத்து வியாதியாலஜிகளும் அத்துபடி அது மட்டும் இல்லாமல் நான் கற்ற இந்த கலைகளின் மூலம் உங்கள் பிளாக்கை மேன்படுத்த வேண்டும் என்று நானே சில பதிவகளை எடுத்துக்காட்டாக கொண்டு விளக்கவுள்ளேன்.

ஒரு அஅடு போட்டுகிறேன்.

ஹிட்ஸ் வரலையா / ஒட்டு விழலன்னு கவலையா பித்தன்ஜிய பாருங்க.

பதிவெழுத மூடு இல்லையா இது உங்க வலை தள வாஸ்து கோலாராத்தன் இருக்கும் பித்தன்ஜிய பாருங்க.

ஒட்டுமட்டும் வருது பின்னூட்டம் வரலையா இதுக்கு கண்டிப்பா ப்லாகசுக்ரி தான் காரணம் பித்தன்ஜிய பாருங்க.

நாசமா போய்கிட்டு இருக்குற ப்லோக் நல்லாகனுமா உடனே பித்தன்ஜி அவர்களின் லேட்டஸ்ட் பதிவில் இரண்டு பின்னூட்டமிட்டு குறைகளை மண்ணஞ்சல் மூலம் அனுப்பவும் ( பின்னூட்டம் உங்கள் குறைகளை பெற மட்டுமே நிவர்த்திசெய்ய பிறகு சொல்லப்படும்)

பதிவுலக வாஸ்து புகழ் கொல்லிமலை மலைசுற்றி சித்தரின் ஆசிபெற்ற ஜோதிட திலகம் பித்தன்ஜி
நாசமா`ப்லாகையா தெரு,
போஸ்ட்`ன், பப்பு`லிஸ்ட்டு
அண்டார்`டிக்`டிக்`கா

பித்தன்ஜி விஜயம்

திங்கள் - செவ்வாய் ( ஹோட்டல் இதுதாண்டா சாக்கு, அறை என் 7.5 , எழாவது தளத்திற்கும் எட்டாவது தளத்திருக்கும் நடுவில் )

செவ்வாய் - புதன் (ஹோட்டல் மாட்டிகிட்டாண்டா மைனர், அறை என் கிடையாது, ரிசப்சன்லையே இருப்பேன் 24/7 )

புதன் - உறேனஸ் (ஹோட்டல் வாமுநிமா வா, அருகில் பிளாட்பாரத்தில் ( அங்கு யாராவது ஆக்குபை பண்ணிட்டா அதுக்கு பக்கத்தில்))

வியாழன் - நெப்டியுன் ( ஹோட்டல் வலது சோமணி, எட்டாவது டேபிளில் ஒரு கிளாஸ் பச்சதண்ணியுடன் காத்திருப்பேன் நீங்க யாராவது வந்தவுடன் தான் அடர் கொடுக்கணும்)

வெள்ளி - புளுட்டோ ( மொபைல் 005488773e093473 கால் பண்ணி ஆலூசனை பெற்றுக்கொள்ளவும் )

சனி - டோயோடோ (ப்லோக் டீ கடை வாசலிலேயே கடன் சொல்லி டீ குடிச்சிக்கிட்டு இருப்பேன் நீங்க வந்து கடனை செட்டில் பண்ணினவுடனே ஆலோசனையை தொடரலாம் )

ஞாயிறு - ஆள விடுங்கப்பா

*^*^*^**^*^*^**^*^*^*

இதோ சிலருக்கு இலவச ஆலோசனைகள்

ஆ.மு செய்யது - மழைக்கு ஒதிங்கியவை...

உங்களோட குறை : பதிவு அதிகமாக வருவதில்லை அல்லது உங்களால் எழுத முடியவில்லை.

பித்தன்ஜி ஆலோசனை : நீங்க அதிகம் பதிவு எழுதாததுக்கு காரணம் நேமாலஜி இசு தான். மழைக்கு ஒதிங்கிட்டு எப்படி காதல் கதை/கவிதை அடிக்கடி எழுதமுடியும் சோ "தேர் இஸ் றாங் வித் யுவர் ப்லோக் நேம்" காதல் கவிதை எழுதணும்ன்னா மழைல நினையனும். நினஞ்சாதான் கனவுல டூயட் பாடிட்டு வீட்டுக்கு போய் காச்சள்ள கஷ்ட படலாம். டுயட்டுல பாடினத பதிவா எழுதலாம்.(இலவசமா இவ்வளவுதான் ஆலோசனை வழங்கமுடியும்,)

*^*^*^*

சோம்பேறி - சோம்பேறி

உங்களோட குறை : சோம்பேறிநாளும் நிறைய பதிவெழுதிட்டு இப்ப ஆளையே காணோம்.

பித்தன்ஜி ஆலோசனை : இப்ப இவருக்கு நல்லகாலம் ஆரம்பிச்சிருக்கு அதான் பதிவெளுதனும்ன்னு நினச்சா கூட அவரால முடியல முடியாது, இன்னும் ஆறுமாசத்துக்கு மேல இவரு இதையே கடைபிடிக்கணும் இல்லாட்டி பூரிகட்டைக்கும், ஆஸ்பத்திரி செலவுக்குமே இவரது வருமானம் சரியாக இருக்கும். ஆனா இன்னும் மூனுமாசத்துக்கு உங்களுக்கு போன்பில்லு அதிகமா வரும்.

*^*^*^*

வால்பையன் - வால்பையன்

உங்களோட குறை : எதிர் பதிவுகள் எழுவது குறைந்து விட்டது

பித்தன்ஜி ஆலோசனை : இது ரொம்ப சுலபமா சரிபண்ணிடலாம் இது வாஸ்த்து பிரச்சனை, உங்க ப்ளோக்ல ஏதாவது ஒரு மூலைல ஒண்ணாம் தேதில இருந்து பதினைந்தாம் தேதி வரை நெப்போலியன் படத்தியும் பதினாறு முதல் மாதம் முடியும் வரை மானிடர் படத்தையும் வைத்தால். தானாக இந்த பிரச்சனை சரியாகிவிடும். அதன் அருகில் சிக்கன் பீஸ் , ஊறுகாய் வைக்க கூடுதல் பலன் கிடைக்கும்.

*^*^*^*

வினோத்கெளதம் - ஜூலை காற்றில்

உங்களோட குறை : ரொம்ப நாளா ஒரு பதிவையும் காணோம்.

பித்தன்ஜி ஆலோசனை : முன்ஜென்மத்துல செய்த புண்ணியத்தின் பலனா இவருக்கு இப்ப ஒரு மாசம் சுக்கரதிசை இருக்கும் அதனால பதிவெழுத மாட்டாரு ஆனா இந்த சுக்கரதிசை தாய் நாட்ட விட்டு கிளம்பினா பலிக்காது, திரும்பி பதிவெழுதி ப்லாகோமேனியா வந்துடும்.

*^*^*^*

பீர் - ஜெய்ஹிந்தபுரம்

உங்களோட குறை : இப்போதைக்கு பதிவு நிறையா எழுதுவிங்க

பித்தன்ஜி ஆலோசனை : நீங்க ஹெடர் இமேஜில ஷூ படம் போட்டதிலிருந்தே உங்களுக்கு வச்ச பதிவுலக பில்லி சூனியம் வேலை செய்யாம போனது மட்டும் இல்லாம உங்களுக்கு நல்லகாலம் போய்டுச்சி, அதிக பதிவு எழுத ஆரம்பிச்சிடிங்க, ப்ளாகோமேனியா தாக்காம பாத்துக்குங்க.

*^*^*^*

உண்மைத்தமிழன் - உண்மைத்தமிழன்

உங்களோட குறை : இவரது பதிவ படிக்க இரண்டு சோடா அல்லது ஒரு கட்டிங் தேவைபடுது

பித்தன்ஜி ஆலோசனை : வாஸ்த்து சரியில்ல, அதே போல சில பரிகாரங்கள் செய்யவேண்டி இருக்கு, இல்லாட்டி இவரோட நாப்பத்தி எட்டாவது வயசுல நான் யூத்து யூத்துன்னு சொல்லிக்கிட்டு இருப்பாரு, இவரு டெஸ்க்டாப்புல அல்லது பக்கத்துல இருக்குற முருகன் படத்த தூக்கணும், அங்க இல்லன்னா பதிவு எழுதுறப்ப முருகன நினைக்ககூடாது, கடவுள் கொடுத்த கொடைன்னு நினச்சி பிளாக்கர் டேட்டாபேச தீக்குறது மட்டும் இல்லாம ரிசசன் டைம்ல கூட படிக்கும் பதிவர்கள இரண்டு சோடா குடிக்க வச்சிடுவாரு.பக்கம் பக்கமா எளுதுறதுனால இவரு வலைத்தளமும் கூட ஸ்லோவா இருக்கும். டெம்ப்லேட் மாத்தினால் நல்ல பலன் உண்டு.

( 54 வயசுல இருக்கவங்களே யூத்துன்னு சொல்லுறப்ப இவரு தாராளமா சொல்லிகிடலாம்ன்னு.... எல்லாரும் சொல்லுறது காதுல கேக்குது பட் நான் என்னோட தொழிலுக்கு துரோகம் பண்ண முடியாதுல... )

அனைவரும் உங்கள் தளங்களை பிரபலமாக்க உங்கள் பிளாக்கில் வைத்த பில்லி சூனியம் எடுக்க, பித்தன்ஜியை நாடுங்கள்.

*^*^*^*

கட்டணம் : பிளாக் ஒன்றுக்கு ( 5 பின்னூட்டம் மற்றும் இரண்டு வோட்டுகள்***)

***(இந்த சலுகை முதல் பதினைந்து கஸ்டமர்களுக்கு மட்டுமே)

*

கிழமொழியில் எழுதப்பெற்ற பாடல்கள்

*

மகான் ஸ்ரீ ல ஸ்ரீ பித்தானந்த பித்தன் சுவாமிகள் அருளிய பித்தபுராணம் நூலிலிருந்து சில பாடல்களும் ( நூல் கிழமொழியில் (கிழக்கு மொழி) எழுதபெற்றது) அதற்க்கு விளக்கங்களும் சொல்கிறேன்.


கிழமொழியில் எழுதப்பெற்ற பாடல்கள்

ஹிஹோ ஹம ஜிம ஸும சிஸ்ய சிறி
ஸஸிஹி ஹோஸ் ஹிஹோ ஹிஹிஹி
உஹொ ஸிகா ச்ஷிச்ச ஸிந்மெ ஜம்
ஸும்சா ஸிம்ஸா ஜிஹொ ஸிஸ்நா.

சிச்க்ஷா ஸுமா ஸிம்கொ ஹெமேஜோ
ஹோச்ற்றி விஸ்ரா விவாக வேவேகா
ஸுவக்திய ஸிஸ்த்ரியா சிம்ஜிலா ஸிஹி
சிமிஜி ஹூச்ம ஹோபாசு வித்ரிஸ்ஹ்மா

ப்பவோ விட்ரிஸ்ஹ ஸுலகா ஸும்ஸா
விஹாரத் விஸ்ஹ்வத்ரி விதொ னம்தோ
திஸ்மாஸ்ஹ்ய திர்ஸ்ஹ்மா திறி திந்ஸ்ஹா
அதம்ஸ்ரியா அகத்ரிஸ்தொ ச்டுஅமா ஹி

நஸ்ஹா நவஹோ நஜிஸ் நம்ஸ்ர்த்ஹா
பிர்ம்ஹெ பிரிஷ்த்ஷ் பிஹிஸ்ஹ் ஸுஹி
ஹம்ஷதத்தோ தஸ்ஹா தஸிர்ஹ சிஸ்
ஸிம்ஹொ சிம்ய் ஸிர்த்தா ஸிந்ஹா.

-ஸ்ரீ ல ஸ்ரீ பித்தானந்த பித்தன் சுவாமிகள்

இனி மகான் எழுதிய பாடல்களுக்கான தமிழ் விளக்கவுரை.

ஹிஹோ ஹம ஜிம ஸும சிஸ்ய சிறி
ஸஸிஹி ஹோஸ் ஹிஹோ ஹிஹிஹி


பிறப்பால் தன்னை உயர்ந்தவன் என்று கருதுபவனும் தாழ்ந்தவன் என்று கருதுபவனும் இந்த உலகில் வாழ தகுதியற்றவர்கள்.

உஹொ ஸிகா ச்ஷிச்ச ஸிந்மெ ஜம்
ஸும்சா ஸிம்ஸா ஜிஹொ ஸிஸ்நா

மனிதனை மனிதனாக மதிப்பவனும், இறைநிலைக்கு சென்றவனும் ஒன்றே

சிச்க்ஷா ஸுமா ஸிம்கொ ஹெமேஜோ
ஹோச்ற்றி விஸ்ரா விவாக வேவேகா


சகுனம், சடங்கு, சம்பரதயத்தை போதிப்பவன் அல்லது பார்ப்பவன் சாமியாராக இருக்க முடியாது

அன்பை மட்டுமே போதித்து அப்படியே அவனும் வாழ்ந்தால் அவனே ஆசான்.
மூணு வேலை பூசை செய்தாலும், இருபத்திநாலு மணிநேரம் இறைவனை நினைத்தாலும், எதையும் நினைக்காதவன் அருகில் கூட செல்ல இயலாது.

ஸுவக்திய ஸிஸ்த்ரியா சிம்ஜிலா ஸிஹி
சிமிஜி ஹூச்ம ஹோபாசு வித்ரிஸ்ஹ்மா

தான் பிறந்த தேசத்தின் பெருமையை மற்றும் தான் சார்ந்திருந்த மதத்தின் துதி பாடுபவனுக்கு எப்படி அனைத்தையும் ஒன்றாக பார்க்கும் மனது இருக்கும், பிறகு அவன் எப்படி ஞானி ஆவான் ?

ப்பவோ விட்ரிஸ்ஹ ஸுலகா ஸும்ஸா
விஹாரத் விஸ்ஹ்வத்ரி விதொ னம்தோ


மதம் பிடித்தாடும் மதத்தை கட்டிக்கொண்டால் உனக்கும் மதம் பிடிக்கும்.
சாதியை தோற்றி வைத்தல் அந்த சாதியே அவர்களை அளிக்கும்

திஸ்மாஸ்ஹ்ய திர்ஸ்ஹ்மா திறி திந்ஸ்ஹா
அதம்ஸ்ரியா அகத்ரிஸ்தொ ச்டுஅமா ஹி


யாருக்கும் தீங்கிளைகாமல் வாழவேண்டும் என்று விரும்பி அவ்வாறே வாழ்ந்தால் உன் வாழ்க்கைதான் வேதம், மற்றதெல்லாம் குப்பை.

நஸ்ஹா நவஹோ நஜிஸ் நம்ஸ்ர்த்ஹா
பிர்ம்ஹெ பிரிஷ்த்ஷ் பிஹிஸ்ஹ் ஸுஹி


மொழிகளில் பீத்தமொழி, நல்லமொழி என்று ஒன்றும் இல்லை எல்லாம் நாம் பார்க்கும் பார்வையில் தான் உள்ளது.
எந்த மொழியில் எழுதப்பட்ட பாடலையும் மனமுருகி பாடினால் அதிர்வலை அதுவாகவே வரும், அனைத்து மொழிகளுக்கும் சக்தி உண்டு.

ஹம்ஷதத்தோ தஸ்ஹா தஸிர்ஹ சிஸ்
ஸிம்ஹொ சிம்ய் ஸிர்த்தா ஸிந்ஹா


எனக்கு கிழமொழி மட்டும் தான் தெரியும் அதனால் தான் இந்த நூலை அந்த மொழியில் எழுதினேன். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் கழித்து எனது கருத்துக்களை அணுஅளவும் கடைபிடிக்காமல், மொழியை மட்டும் பிடித்துக்கொண்டு அதையும் முழுவதும் படிக்காமல், சரியாக உச்சரிக்க மற்றும் அர்த்தம் தெரியாமல் அதுவருது, அதிர்வலை வருது சக்தி வருது கடவுள் மொழி என்று கதை விட்டு மொழியை சிதைக்காமல் இருந்தாலே போதும்.

இந்த பாடல்கள் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய பாடல்களாக இருக்கலாம் .

உள் நோக்கி

*


சோறு கொடுக்க
சோதிக்கும் ...
மதியற்றவனனா ?

விடையும் கொடுக்கா
வழியும் கொடுக்கா
பித்துபிடித்தவனோ ?

வினைதீர்க்க
வினையறுக்க
வீற்றிருப்பானோ ?

முத்திகொடுத்து
பிறப்பறுக்க
முயல்கின்றவனோ ?

பிறப்பருமை
தெரியாத
பிண்டபிறவிக்கு

இவன் பிறப்பறுக்க
பிறந்திருக்கிறேன்
உள் நோக்கி.


*

பிரபல பதிவரின் பயோடேட்டா, படிக்க வாங்கோ... வாங்கோ...

*

பிரபல பதிவரின் (சந்தேகமா ? சோத்தாங்கை பக்கம் பாருங்க பதக்கத்த) பயோடேட்டா, படிக்க வாங்கோ... வாங்கோ...

பெயர் : பிரபலபதிவர்

புதிய பெயர் : ப்லோகிங் கிங், பின் நவினத்துவ பதிவர் , சைடு நவீனத்துவ பதிவர், லெப்ட் நவீனத்துவ பதிவர், ரைட் நவீனத்துவ பதிவர்

வயது : இரவுமுழுவதும் ஜி டாக்கில் கடலை (ஜொள்ளு விடும்) போடும் வயது.

தொழில் : ஒருவரை(மாட்ரவங்கள) குறிவைத்து பதிவுலகை விட்டு விரட்டுதல்.

உபதொழில் : அவர் திரும்ப பதிவுலகிற்கு வந்தால் விட்டுவிடுதல்.

குணம் : பாராட்டே ஆனாலும் ஆண்கள் மின்னஞ்சல் மட்டுமே அனுப்பவேண்டும், பெண்கள் திட்டுவதாக இருந்தாலும் என் கைபேசிக்கு அழைக்கவேண்டும் என்று எண்ணுவது.

குரல் : சும்மா கிடக்குற சங்க நல்லா எடுத்து ஊதிட்டு, அப்பாலிக்கா சங்கே ஊதாதமாதறி நடிக்குறது.

நண்பர்கள் : நா கண்டததுக்கு, எல்லாம் சங்க ஊதுரப்ப கூட சேந்து ஊதுபவர்கள்

எதிரிகள் : நான் சங்கு யாருக்காக ஊதிநேனோ அவர்களே கண்டுகொள்ளாததால்.

பிடித்த வேலை : பதிவில் ஜொள்/ரொமான்ஸ்/காதல்/தூதுவிடல்.

பிடித்த பதிவு : சோ கால்ட் பிரபல பதிவர்கள், பதிவுகள் (படிக்காமலேயே)

பிடிக்காத பதிவு : என் நண்பர்களுக்கு பிடிக்காதது எனக்கும் பிடிக்காது (நல்லருந்தாகூட)

பிடித்த வலை : எதிர்பதிவு. பிரச்சனைய கிளப்பி.ஜகாவாங்கி. பதிவ தூக்கி. காம்

விரும்புவது : தனி ஒரு நபருக்காக/நபருக்கு மட்டும் புரியும் வகையில் எழுதும் ரொமான்ஸ்/லாவ்ஸ்/ஜொள்ஸ் கவிதைகள்

விரும்பாதது : மேலே சொன்ன கவிதைகள் எனக்காக எழுதபடாதது.

பொழுதுபோக்கு : மொக்கை பதிவுகள் இடுவது.

புரிந்தது : குருப்பா இருந்தாதான் பதிவுலகில் தொடர்ந்து எழுத முடியும்.

புரியாதது : மொக்கையா நாம கருத்து சொல்லுவோம், ஆனா இன்னொருத்தர் அதே போல மொக்கையா கருத்து சொன்னா கூடி கும்மியடிக்குறது.

எளிய செயல் : எதிர்பதிவு போடுவது

அதைவிட எளிய செயல் : ஐந்து நிமிடங்களில் அதை தூக்குவது

சமீபத்திய எரிச்சல் : ரொம்ப பிளான் பண்ணி நடத்துன நாடகம் புஸ்ஸுன்னு போச்சி. (ரொம்ப உசாரா இருக்காங்க மக்கள் -:( )

நீண்டகால எரிச்சல் : ஒரு மொக்கை பதிவர்ன்னு முத்திரை குத்தப்பட்டது.

சமீபத்திய சாதனை : கீழ விழுந்தாலும் மீசைல மண் ஒட்டல.

நீண்டகால சாதனை : பிரபலபதிவர்ன்னு பிலிம் காட்டுறது

எந்த வளமும் இல்லாத நாடு எப்படி முன்னேறுவது ?


சுதந்திரம் பெற்றபொழுது எந்த வளமும் இல்லை, ஆனால் இன்று ஆசியாவில் சிறந்த பொருளாதாரத்தை கொண்டுள்ள நாடு, பல ஆண்டுகளுக்கு முன்பே பலலட்சம் வெளிநாட்டவருக்கு வேலை வாய்ப்பையும் கொடுக்கும் அளவுக்கு வளர்ந்த நாடு.

ஆண்டு 1965






ஆண்டு 2000




ஆண்டு 2009





நம்பிக்கை, உழைப்பு, நல்ல தலைமை இருந்தால் எதுவும் சாத்தியம், என்பதை நிருபித்த, நிரூபிக்கும் சிங்கை இதற்க்கு உதாரணம்.

சிங்கைக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

*


44 ஆவது பிறந்தநாள் கொண்டாடும் சிங்கைக்கு
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.



எங்கே கடவுள் ? ( எதிர் வினை)



அண்ணன் அப்பாவி முரு தேடிகொண்டிருக்கும் கடவுளை நான் இங்கு காட்டுகிறேன்.





பணக்காரனும் தேடுகிறார்,



ஏழையும் தேடுகிறார்.




போற்றியும், திட்டியும்



சகஸ்ரநாமம் பாடுகிறார்.




வேண்டுமென்றும், வேண்டுமென்றும்

வேலைகள் பல செய்கிறார்,





வேண்டுமென்பவர் வேண்டுமென்றும்,

வேண்டாமென்பவரும் வேண்டுமென்றும்

உருத்தலில்லாமல் வேண்டுகிறார்.





அங்குமில்லாமல், இங்குமில்லாமல்

நடுவில் அப்பாவியாக நின்றாதால்

இருவரும் பெற்ற பெரும்பேர்

எனக்கில்லாமல் போகுமோ?





வேண்டுமென்பதோ, வேண்டாமென்பதோ

இன்றே தெரிந்தால்,

போற்றியோ, திட்டியோ

சகஸ்ரநாமம் பாட

நானும் தேடுகிறேன்

எங்கே பணம் ?





-ஸ்ரீ ல ஸ்ரீ பித்தானந்த பித்தன் சுவாமிகள்



பின்னூட்ட குறிப்பு :: குழந்தை முரு (கூல்..கூல்... நா இப்ப சுவாமி) அவர்கள் இரண்டு பின்னூட்டங்களும், மற்றவர்கள் தலா ஒரு பின்னூட்டமூம் இட்டு சுவாமிகளின் ஆசியை பெறுங்கள்.



"பிரபல பதிவர்" விருது வழங்கும் விழா

*

நான் அறிவித்த இந்த ( சோத்தாங்கை பக்கம் ஒரு "பிரபல பதிவர்" விருது விற்பனைக்கு இருக்கும் சொடுக்கி பாருங்க) திட்டத்தில் பங்குபெற்று ஒரே வாரத்தில் பிரபலமானோர் பலர், அவர்களை அங்கீகரிக்கப்பட்ட பிரபலபதிர்வர்களாக அறிவிக்கிறேன் இனிமேல் அவர்களும் இதை "எம்.எல்.எம்" போல் தொடரலாம்.


குறிப்பிட்ட தொகை பின்னூட்டம் மற்றும் ஒட்டு போட்டவர்களுக்கு மட்டுமே கம்பெனி விருதை அறிவிக்கின்றது. இந்த லிஸ்டில் உள்ளவர்களில் யாரும் கையூட்டு கொடுக்கவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.




வால்பையன்


இவரு நம்ம கம்பெனி விருத அறிவிக்கிறதுக்கு முன்னாடியே நம்ம கடை கஸ்டமர் ( கொலை வெறி கவுஜைகளுக்கு) அதனால் அண்ணாத்தைக்கு முதல் விருது. ( இவரு ஏற்கனவே பிரபலம் அப்படின்னு கூவுரவங்களுக்கு சொல்லிகிறேன்.. அப்படியே இருந்தாலும் இனிமேல்தான் இவரு அங்கீகரிக்கப்பட்ட பிரபலம்)

*^*^*^*

ஜெகதீசன்


இவரு பதிவுலக அங்கீகார ஆணையம் அப்படி இப்படின்னு ஆரம்பிச்சி இருந்தாலும், இவ்வளவு நாளும் அங்கீகரிக்கப்படாத பிரபலமாதான் இருந்தாரு இன்று முதல் அங்கீகரிக்கப்பட்ட பிரபலம். ( ஒவ்வொரு பதிவுலயும் -:))) போட்டே விருத வாங்கிட்டாரு, இனிமேல் இது போல பின்னூட்டம் போட்டால் விருதுக்கு எற்றுக்கொள்ளபடாது )

*^*^*^*


அ.மு.செய்யது


இவரு பழைய கஸ்டமருதான் பட் இவரோட பின்னூட்ட நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. மழைக்கு ஒதுங்காம ஜன்னில எங்கயோ போய்டாருன்னு நினைக்குறேன் இருந்தாலும் விருது கொடுக்கப்படுகிறது. ( எதிர் கவுஜை ஏகாம்பரம்ஸ் ஜாஸ்தி ஆகிட்டதால இப்ப கவிதை எழுதுறதையே நிப்பாடிடதாக நியூஸ் )

*^*^*^*


தேவா சார்


இவரு ரொம்ப நல்லவரு, லேட்டானாலும் லேட்டஸ்டா வந்து பின்னூட்டம் போடுவாரு... ( திரும்ப திரும்ப கேக்ககூடாது,,, பிரபலமா இருக்கலாம் அங்கீகரிக்கப்பட்ட பிரபலம் இன்றுதான் )

*^*^*^*

லோகு


இவரும் திரும்பி எழுதவந்ததுக்கு தனியா காரணம் சொல்லவேண்டாம், இந்த விருத இவரு வாங்குரப்பவே தெரியும் உங்களுக்கு, நிறைய பதிவுக்கு முதல் கஸ்டமர், சோ இவரும் இன்று முதல் அங்கீகரிக்கப்பட்ட பிரபல பதிவர். ( ரொம்ப பீலிங்க்ஸா கவிதா எழுதிகிட்டு இருக்காரு எதிர் கவுஜை போட்டாதான் சரிப்பட்டு வரும் )

*^*^*^*


S.A. நவாஸுதீன்


இவர் போட்டில ரொம்ப உண்மையா மற்றும் அதற்காக உழைத்து விருதை பெறுகிறார். ( டேக் ஹிம் அஸ் எக்சாம்பல் )

*^*^*^*


குரும்பையூர் இலக்கியா


இவரும் போட்டில ரொம்ப நேர்மையா பங்குபெற்று விருதை பெறுகிறார். ஆனா இவரு பேக்கேஜ்ஜவிட அதிகம் பின்னூட்டம் போட்டுடாரு சோ இவருகிட்ட இன்னொரு வலைத்தளம் இருந்தா அதுலயும் விருத போட்டுக்கலாம்.

*^*^*^*


சக்கரை சுரேஷ்


முப்பது மார்க் எடுக்குரவங்கள இனிமேலாவது நல்லா படிக்கட்டும்ன்னு கூட அஞ்சி மார்க் போட்டு பாஸ் பண்ணிவிடுரமாதரி இவருக்கு இந்த விருது... பதிவுலகவிட்டு கொஞ்சநாள் ரெஸ்ட் எடுக்கபோனவரு எப்படி சீக்கிரம் திரும்பி வந்தாருன்னு பாத்தா இந்த விருதுதான் இவர இழுத்துகிட்டு வந்திருக்கனம்ன்னு நினைக்குறேன். ( இப்ப அன்ப வெளிபடுத்த என்னோட அட்ரஸ தேடுவிங்கன்னு தெரியும்... கூல்... கூல் )

*^*^*^*

நிறையபேர் சொற்ப வித்யாசத்துல விருத கோட்டைவிட்டுடிங்க.. மனம் தளராம ட்ரை பண்ணுங்க... ஆல் தி பெஸ்ட் பார் வின்னர்ஸ்.... மற்றவர்களுக்கு வழக்கமா சொல்லுறது தான்... ம்ம் அதேதான் "பெட்டெர் லக் நெக்ஸ்ட் வீக்".