பெரும்பாலானோர் சாப்பிடவில்லை என்பதற்காக நாமும் சாப்பிடாமலா இருக்கமுடியும் ?. நம் நாட்டில் காக்காத்தான் அதிகம் இருக்கின்றது அதற்காக அதையா நாம் தூக்கிவைத்து கொண்டாடுகிறோம்?. அவர்கள், அவர்கள் உணவை மற்றவர் திங்கவேண்டும் என்று எதோ சர்வதிகார தோணியில் சொல்கின்றனர். இந்த இழவுக்குதான் கடை ஆரம்பிச்சவுடன் எங்க கூடவே இருக்கன்னு சொன்னது ?. அவர்கள் உணவையே எங்கள் மீது திணிக்கும் நபர்கள்தான் எங்களுக்கு கடையில் வேலை செய்ய சம உரிமை கொடுப்பார்கள் ?. ஹோட்டலில் எத்தனை சீப் குக்குகள் இட்லியோ அல்லது இடியாப்பமோ தின்பவர்கள் வந்திருக்கிறார்கள் சற்று யோசிக்கவும்? அல்லது இனிமேல் வருவதற்கு வாய்புகள் இருக்கின்றதா ? வாரிசு குக்குகள் மட்டுமே இனிமேல் சீப் குக்காக வர வாய்புள்ளது. கூறு கெட்ட குப்பன்கள் வேண்டுமென்றால் இன்று சப்பாத்தியை சாப்பிட்டுக்கொண்டு அவர்கள் அடையாளங்களை அளித்துக்கொண்டிருகிறார்கள். எந்த விதத்தில் என் இட்லியோ அல்லது பொங்கலோ கெட்டுபோகிவிட்டது.
சப்பாத்தி சங்கத்தின் நோக்கம் புரியாமல் நான் வெளிநாடு வந்தவுடன் இங்கு சப்பதிதான் கிடைக்குது, இட்லி வடை கிடைக்கவில்லை, எல்லாம் உங்களமாதரி ஆளுங்களாலதான் இன்னைக்கு கஷ்டப்பட்டு சப்பாத்தி சாபிடுறேன், அங்கேயே சாப்பிட்டு பழக்கம் இருந்தால் இந்த தொல்லை இல்லை என்று கூப்பாடு போடுகின்றனர். உங்களை யாராவது சட்டையை பிடித்து இட்லி மட்டும் சாப்பிடுங்கள் என்று கூறினார்களா ? சப்பாத்தி கிடைக்கும் நாட்டுக்குத்தான் போகபோகிறிர்கள் என்றல் சப்பாத்தி சாப்பிட கற்றுக்கொள்ளாதது யார் தவறு ?.
இவர்கள் உக்காந்த இடத்துல இருந்தே நோகாம நோம்பி எடுக்கனுமாம் அதுக்காக அனைவரும் சப்பாத்தி சாபிடவேண்டுமாம். இந்த கருமத்துக்கு பர்கரா திண்ண கத்துகிட்டா எந்தநாட்டுக்கு சென்றாலும் (பெரும்பாலான) பிரச்சனை இல்லை என்றால். குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டும் இவர்கள் அடுத்தவர்களை பார்த்து குண்டு சட்டிக்குள் குதிரை ஒட்டுகுறிர்கள் என்கிறார்கள் இந்த அறிவாளிகள். இன்னும் ஒரு கூட்டம் சப்பாத்தி சாப்பிட்டா எதோ ஊருக்கே படி அளக்கலாம் என்பது போல கூறுவது வாடிக்கையாக வைத்திருகிறார்கள். ஒரு கடை வைக்கவேண்டும் என்றால் பலவகையான உணவுகள் உண்பவர்களை வைத்து ஒரு கடை வைக்க ஆசை மட்டும் வைத்தால் எப்படி ? அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து நடக்க வேண்டும் அதற்க்கு வக்கில்லை என்றால் என்ன இழவுக்கு அனைவரையும் சேர்த்தார்கள் என்று தெரியவில்லை, இவர்களே கடையை நடத்தவேண்டும் மற்றவர்கள் கைகட்டி நடக்கவேண்டும் இவர்கள் சர்வாதிகார போக்கில் கடையை நடத்துவார்கள் ஆனால் இதை எல்லாம் எதிர்த்து கேட்டால் கடையின் முறையாண்மைக்கு எதிராக கேள்வி கேட்கின்றார்கள் என்று மிரட்டுவார்கள்.
ஒரு பெரிய கடை கீழ் அனைத்து வகையான உணவுகளும் வைத்து கொள்வது நல்லது அதற்க்கு தகுந்தாற்போல் அனைவரின் உரிமையையும் உணர்வுகளையும் மதிக்கதெரிந்தால் தான் அது ஒரு நல்லகடையாக அமையும். அதவுட்டுபுட்டு சப்பாத்தி சாப்பிடு என்று நேரம் சாதகமாக இருக்கும் பொழுது கூவுவது எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள இயலாது.
சப்பாத்தி வேண்டும் கண்டிப்பாக சாப்பிடவேண்டும் என்பவர்கள் அவர்களே தேடி சென்று சாபிடுகிறார்கள் எதுவும் புரிஞ்சிக்காத அரவேக்காடுங்க தான் அவன் புள்ளமட்டும் சப்பாத்தி சாப்பிடுது, நம்மள ஏமாத்துரானுக என்று கூவும்... வேணும்ன்னா போய் தின்னுகளே யார் வேணான்னு சொன்னா ? அதவிட்டுபுட்டு எல்லாரும் என்னாத்துக்கு கட்டாயமா தின்னனும்ன்னு சொல்லுரிங்கன்னு தெரியல, எவனாவது நாலுபேரு ஏமாத்திபுட்டானுகன்னு சொன்னா, ஆமா ஏமாதிபுட்டனுகன்னு கன்னமூடிகிட்டு சொல்லுறது... கூவுறதுக்கு முன்னாடி கொஞ்சம் யோசிச்சிட்டு கூவுங்க....