அரிதாரம்

*
காலத்தின் கோலம்
முன்சென்றதன் சாபம்
நானாக இல்லை

யாருமறியாமல்
அரிதாரம் பூசி
ஆடத்தொடங்கி

மழைவேகத்தில்
கலை தொலைய
ரிதாரம் களைய

எஞ்சிய வண்ணங்களிலும்
அதன் கண்ணீரிலும்
அரிதாரம் தெரிகிறது.

*

என்னத்த சொல்ல ?

*

தம்பி லோகு நல்லாருடா

1. A – Avatar (Blogger) Name :ஞான பித்தன்

2. B – Best friend? : Friends : தனிமை

3. C – Cake or Pie? : கேக் (முட்டை சேர்க்காத )

4. D – Drink of choice? பசும்பால் காப்பி

5. E – Essential item you use every day? கணினி

6. F – Favorite color? கருப்பு & வெள்ளை

7. G – Gummy Bears Or Worms : அப்படினா

8. H – Hometown? - தமிழகம்

9. I – Indulgence? - ஊர் சுற்றுவது

10. J – January or February? - இரண்டும்

11. K – Kids & their names? நானே குழந்தை தான்

12. L – Life is in complete without? அன்பு உயிர்களிடத்தில்

13. M – Marriage date? - -:(

14. N – Number of siblings? -:(

15. O – Oranges or Apples? ஆப்பிள்..

16. P – Phobias/Fears? Ophidiophobia தொடர் பதிவு

17. Q – Quote for today? பிறப்புக்கும் எல்லாஉயிர்க்கும்

18. R – Reason to smile? சிரிக்காமலிருக்க காரணம்.. ?

19. S – Season? சில்லுன்னு ஒரு மழைகாலம்

20. T – Tag 4 People?-

ஞான பித்தன்,
ஞான பித்தன்,
ஞான பித்தன்,
ஞான பித்தன்,

21. U – Unknown fact about me? தெரியல

22. V – Vegetable you don't like? கத்தரிக்கா

23. W – Worst habit? தொடர் பதிவு எழுவது -:)

24. X – X-rays you've had? இந்த கேள்வி எதுக்கு ?

25. Y – Your favorite food? புட்டு/இடியாப்பம் (தேங்காய் பாலுடன் )

26. Z – Zodiac sign? பொண்ணு பாக்க போறிகளா ?


***********

அன்புக்குரியவர்கள்: அனைவரும்...

ஆசைக்குரியவர்: பில்டேர் காப்பி போட தெரிந்தவர்கள்...

இலவசமாய் கிடைப்பது: அறிவுரைகள்,கருத்துகள்...

ஈதலில் சிறந்தது: இயன்றதை கொடுக்கும் அனைத்தும்

உலகத்தில் பயப்படுவது: எனக்கு

ஊமை கண்ட கனவு: மற்றவர் காணும் கனவைபோலதான்

எப்போதும் உடனிருப்பது: நம்பிக்கை

ஏன் இந்த பதிவு: நட்புக்காக

ஐஸ்வர்யத்தில் சிறந்தது: எல்லா இன்புற்றிருக்க நினைப்பது..

ஒரு ரகசியம்: பரமரகசியம்..

ஓசையில் பிடித்தது: மௌனம்

ஔவை/பாரதி மொழி ஒன்று: அச்சம் தவிர்

(அ)ஃறிணையில் பிடித்தது: ஸ்ஸ்ஹ் இப்பவே கண்ணகட்டுதே

*

துரத்தலின் நினைவுகள்

*

என்னை துரத்துவது என்னவென்று புரியவில்லை ஓடுகிறேன். தனித்து இல்லாததால் மாற்றுவழி தேடி ஓடினேன் உயிரே திரைப்பட பாடல்கள் ஒலித்துகொண்டிருக்கிறது, துரத்தல் தொடர நிற்காமல் மீண்டும் வேகமாக ஓட... வழியடைத்து நெருங்க வாய்ப்பில்லாமல் தொடர்பு துண்டிக்க... எங்கு செல்ல என்று புரியாமல் நடக்க தொடங்கினேன் துணைக்கு புகை கூடவே வருகிறது, இன்னும் வேகமாக அது என்னை துரத்துகிறது. வழிதடுப்பை உடைத்து கற்ப்பனையில் பயணிக்கிறேன். என்னையறியாமல் என் முகத்தில் மனதில் புன்னகை, கால்பகுதியை அடைந்து ஒரு காபி குடிக்க, கற்பனை நீண்டுகொண்டே செல்கிறது. விடியற்காலை வீட்டை நெருங்க எதிர்பாக்காதவண்ணன் ஏன் இப்படி என்றான், லூசு என்று கூட திட்டினான் ஆனால் மாறாக ஏன்னே வழியை ஏற்படுத்தல என்று மற்றுமொரு குரல். எதிர்பாக்கவில்லை துரத்தலின் சக்திதான் இதுவோ என்று நினைத்துக்கொள்ள தூண்டியது.

கருப்பு, வெள்ளை உடை பையில் பலவண்ண பேனா ஒரு சிறு அளவுகோல் துரத்தலின் காரணமாக இந்த கோலத்தோடு இந்த முறை வந்துவிட்டேன். அது என்னை வேகமாக நெருங்கிவிட்டது, நானும் நெருங்கிவிட்டேன் பைத்தியமென்றே நினைத்திருக்க கூடும் பார்ப்பவர், அவர்களுக்கு எப்படி தெரியும் ? அவர்களை துரத்தினால் தானே தெரியும். ஈ கூட ஆடவில்லை ஒரே பயம் எங்கே என்னை துரத்தியது என்னை தாண்டி சென்று அவர்களை பிடித்துவிடுமோ என்றோ தெரியவில்லை ஆனால் பயம் கண்டிப்பாக இருக்கத்தான்செய்யும் யாராக இருந்தாலும். நடக்க இயலாது என்று தெரிந்ததும் அது தானே விலகியது, சுற்றி பலர் இருந்ததால் அந்த முடிவாக இருக்கலாம். சரியான தூக்கம் இல்லை என்றுதான் தோன்றியது ஆனால் பயம்தான் இந்த தூக்கமின்மைக்கு காரணமா? என்று புரியவில்லை, அல்ல அல்ல அது கூட இருக்கலாம் ஆனால் விளைவுகளை கண்டு பயம் இல்லை அப்பொழுது மகிழ்ச்சிதான், விண்ணைமுட்டும் மகிழ்ச்சி.

இந்த முறை அதன் மிரட்டலுக்கு உட்பட்டு எதற்கும் பயமில்லாமல் சென்றேன் எந்த எதிர்பார்ப்பும் இல்லை அதனால் பயமும் இல்லை, மெது மெதுவென்று உள்பக்கம் பஞ்சு பதிக்கப்பட்ட குளிரிலிருந்து பாதுகாக்கும் உடையை அணிந்திருந்ததால், குளிரிலிருந்து உடம்பை பாதுகாத்தாலும் கைகள் வெளியே தெரிய இரண்டு உள்ளங்கைகளையும் ஒன்றோடு ஒன்றை தேய்த்து சூடு உண்டாக்கி கன்னத்தில் வைத்துக்கொண்டேன் அந்த குளிரில் இந்த சூடு சுகமாக இருக்க ஒரு தேநீர் வாங்கி அந்த குளிரில் குடிக்க மேலும் அது என்னை துரத்தியது, சிறிய பயணத்தில் அது என்னை முந்தி வேறுதிசையில் செல்ல மாற்று திசையில் வேகமாக பயணிக்க இறுதி கனவை தொற்றிக்கொண்டு பாதி தொலைவை தூரத்தை கடந்து ஒரு காபியுடன் கனவை தொடர காலையில் அனைத்தும் கனவுபோல இருந்தது.

கனவா அல்லது நிசமா என்று தெரியாமலே நான் பயந்து ஓடிக்கொண்டிருக்க அது என்னை வேகமாக துரத்திக்கொண்டுதான் இருந்தது அனைவரும் என் கூட இருந்தும் யாருக்கும் இது தெரியாது, தெரிந்தால் பைத்தியக்காரன் என்று முத்திரைகுத்திவிடுவர் என்று எண்ணினேனோ என்னவோ, விரைவில் தெரிந்தது பரவாயில்லை நான் பைத்தியமாகவே இருந்துவிட்டு போகிறேன். உருவம் தெரியாத ஒன்றுக்காக நான் பைத்தியக்காரன் பட்டம் வாங்க சம்மதித்தேன். பட்டம் வழங்கப்பட்டது ஆனால் அதற்குண்டான முழுத்தகுதி அப்பொழுது இல்லை. விரைவில் வரபோகிறது என்று அறியவும் இல்லை.

துரத்தல் இருந்தாலும் மாற்றுபாதையில் பயணிக்கவேண்டி இருந்தது இருக்கா இல்லையா என்று தெரியவில்லை ஆனால் பயணம் தொடங்கியது தெரியாததால் துரத்தல் அதிகமாகிற்று அங்கும் இங்கும் தேடி இல்லை என்ற முடிவுக்கே வந்து கண்ணீர்வர இல்லை இல்லை இருக்கு என்று நம்பிக்கைவிதையை உள்ளுணர்வு தொடக்கத்தில் விதைத்து மரமாக வளர்ந்திருந்தது. உள்ளுணர்வின் கூற்று பொய்யில்லாமல் போயிற்று. முழங்கால் அளவு தண்ணிரில் நடந்து பெருமழையில் நினைந்து ஒதுங்ககூட மனமில்லாமல் கால்போனபோக்கில் மலையில் நினைந்து திறிய மயக்கம் தெளிய சன்னலோரத்தில் அமர்ந்து கற்பனையில் பயணித்தேன்.

காலங்கள் ஓட துரத்தலின் வேகம் குறைய கனவுகளைந்து பைத்தியமாகவேமாறி தெருக்களில் அலைந்துகொண்டிருக்கிறது துரத்தலின் நினைவுகள்.

*

360 டிகிரி - ஒரு பார்வை

*

***இதை வாசித்துகொண்டிருக்கும் பொழுது***

- கோபத்தின் உச்சிக்கு சென்றிருக்கலாம்

- யாராவது ஒரு புதிய செருப்பை வாங்கி எழுதியவருக்கு பரிசாக வழங்கிருக்கலாம்

- அல்லது ஒரு படி மேலே போய் அதை கொண்டே அவரை அடித்திருக்கலாம்

- உடனே அந்த புதிய செருப்பு, என்னை அவமானபடுத்திவிட்டாயே என்று கூறிருக்கலாம்

- காரி அந்த புத்தகத்தின் மீது உமிள்ந்திருக்கலாம்.

- புத்தகத்தை எரித்திருக்கலாம்

- படிக்காதே என்று நண்பர்களுக்கு சிபாரிசு பண்ணிருக்கலாம்

- இந்த புத்தகத்தை படிப்பதை பார்த்து காதலி பிரிந்திருக்கலாம்

- கணவன் இந்த புத்தகம் படிப்பதை பார்த்து மனைவி கையில் கிடைப்பதை கொண்டு அடித்திருக்கலாம்.

- புதிய பரிமாணத்தை போய் திட்டுரியேன்னு சொன்ன நண்பனிடம், உன் உடன்பிறந்தவர்களுக்கு வாங்கிகொடுத்து படிக்க சொல்லிவிட்டு, அப்பறம் வந்து என்னிடம் பேசு என்று அவன் நண்பன் சொல்லிருக்கலாம்.

இனி 360 டிகிரியை பற்றிய பார்வை.

சிபத்தில் சிந்திய சிலமணி சிங்காரம் ஆத்திரம் ஆண்கம் அதிமசானம் உலக இருகியவாரம் இந்தி ரேகம் சுண்டரம்தின் சூனியமான சிந்தனைகள் சிந்தித்தா சர்கம் சவரகம் சிந்திராசம் என்று க்ந்திறோம் க்குர் ராக கூறுவதி விடியற்காலை விடாத காற்றின் கீதத்தில் அசைந்தாடும் அனனத்து மனதின் தொன்மையில் மலர்ந்த மலரின் மகரந்தமே அதனி சிந்தையில் சீக்கிரம் சிர்க்கம் என்பதன் பொருள்பட மொழியில் சூழ்ச்சியின் சுதந்திர நடையில் நான் எலுதிர்யாத்து பின் நவீனத்துவம்.

எனது பார்வை உங்களுக்கு புரியவில்லை என்றால் நீங்கள் ஞானசூனியம், புரிந்திருந்ததாக கருதினால் உடனே மனநல மருத்துவரை அணுகவும்.

*

எலும்புத்துண்டுக்காக சில நாய்குட்டிகள்.

*

அது ஒரு அழகிய வீடு, சற்று பெரிய வீடு, அதனை சுற்றி தோட்டம். தொடக்கத்தில் அதனை பாதுகாக்க ஒரு வகையான வெள்ளை நாய்கள் மட்டுமே இருந்தது. வீட்டின் சொந்தகாரர்கள் நன்மதிப்பை பெற்று நண்பர்களாகவே அவைகள் இருந்தது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல வீட்டின் எசமான் பலவகை நாய்களை வாங்கி ஆதரிக்கதொடங்கினார். அதனால் பல கருப்பான நாய்களுக்கும் வீட்டை பாதுகாக்கும் பொறுப்பு கிடைத்தது. அதற்க்கு காரணம் வெள்ளை நாய்களை விட கருப்பு நாய்களுக்கு அல்லது நாட்டு நாய்களுக்கு வீட்டை காப்பது எப்படி என்று நன்றாக தெரியும் வாலை வீட்டின் சொந்தகாரர்களுக்கு மட்டும் ஆட்டும் மற்றும் கருப்பு நாய்களுக்கு இயற்கையிலேயே காக்கும் திறனைவிட பார்க்க அழகு நடையில் நடப்பதால் வீட்டின் எசமானர் கருப்பு வகை நாய்களையே, நாய்கள் வாங்கும்பொழுது வாங்கதொடங்கினார். இதனால் நாளாக நாளாக வெள்ளை நாய்களின் எண்ணிக்கை குறைந்து கருப்பு நாய்களின் கட்டுப்பாட்டுக்குள் வீடு வந்தது.

கருப்பு நாய்கள் எசமானின் விருப்பப்படி அல்லது விரும்பும்படி நடந்துக்கொண்டது அதனால் எசமானுக்கு எதாவது உபயோகமாக இருந்ததா என்று பார்த்தால் ஓரளவே இருந்தது என்றுத்தான் சொல்லவேண்டும். ஆனால் தங்களுக்கு பிடிக்காத வெள்ளை நாய்களை வீட்டை விட்டு துரத்தியதில் வெற்றிக்கொண்டது. இதனால் வெகுநாட்களாகவே வெள்ளை நாய்களின் மொத்தவியாபாரிக்கு ஒரே கவலையாக இருந்தது அதற்க்கு காரணமும் இருந்தது, அந்த தெருவில் உள்ள முக்கால்வாசி வீடுகளில் பாதுகாப்புக்கு வெள்ளை நாய்களை மட்டுமே இருந்தது. ஆனால் இந்த வீட்டை பார்த்து அனைவரும் கருப்பு நாய்களை வாங்க தொடங்கினால் தனது கடையை மூடிவிட வேண்டியதுதான் என்று பயம் அவருக்கு.

சில நாட்களிலேயே வியாபாரி நினைத்தது நடக்க தொடங்கியது. பல வீடுகளில் வெள்ளை நாய்கள் துரத்தப்பட்டு நாட்டு நாய்களை வாங்கிக்கொண்டனர். இதனால் வெள்ளை நாய் வியாபாரியின் வியாபாரம் நொடித்து, பொழப்பு நடத்த முடியாமல் போய்விட்டதால் ஒரு முடிவு செய்து மற்ற நாட்டு நாய் வியாபாரிகளுடன் சேர்ந்து வியாபாரம் செய்ய முடிவு செய்தார். யோசனை ஓரளவுக்கு கைகொடுத்தது ஆனால் பழைய வியாபார செல்வாக்கு போய்விட்டதை நினைத்து வெள்ளை நாய் வியாபாரி கவலைகொள்ளதான் செய்தார் இந்த சமயத்தில்தான் கடை பொறுப்பை வியாபாரியின் மகன் ஏற்றுக்கொண்டார். தனது கடையின் வியாபாரத்தை பெருக்க பலவகைகளில் யோசித்து ஒரு திட்டம் தீட்டினார் அதன்படி முதலிடாக சில எலும்புத்துண்டுகளை போட்டு தெருநாய்களை பிடிப்பது அதுவும் குட்டியாக இருக்கும் பொழுதே பிடித்துவிட்டால் பழக்கிவிடலாம் பழக்கிவிட்டால் நல்லவிலைக்கு போகும். அதோடு முதலிடு மிகவும் குறைவு.

திட்டத்தின் படி தெரு தெருவாக சுற்றி கண்ணில் தென்படும் குட்டிநாய்களுக்கு எலும்பு துண்டுகளை போட்டு பிடித்தார். எலும்பு துண்டு வாங்கும் செலவை குறைப்பதற்காக மற்றும் இவைகளால் தான் வியாபாரம் குறைந்தது என்ற கோபத்தை தணிக்க , கருப்பு நாட்டு நாய்களை குட்டி , பெருசு என்று பாரம்பட்சம்மில்லாமல் கொன்று அதன் எலும்புகளை தனக்கு வியாபாரி போட்டார் என்று தெரிந்தும் கூட அந்த எலும்புத்துண்டை கவ்விக்கொண்டு வியாபாரிக்கு வாலாட்ட தொடங்கியது குட்டிகள். வியாபாரத்தை பெருக்க போட்ட திட்டம் வெற்றி என்று வியாபாரியும், இனி வீடுகளை பாதுகாத்து வெள்ளை நாய்களின் எண்ணிக்கையை வீடுகளில் பெருக்கி வியாபாரிக்கு விசுவாசமாக இருக்கவேண்டும் என்று குட்டி நாய்களும் நினைத்துக்கொண்டார்கள். இந்த விசயம் எசமானர்களுக்கு தெரியுமா. என்று தெரியவில்லை.


*

பித்தன் முதல் ஞான பித்தன் வரை

*

நான் சிறு வயது முதலே தியானம் செய்து கொண்டிருந்தாலும் நேற்று தான் ஒரு பாறையின் மீது ( ஜிஸோ மலையிலிருந்து இருபத்தி எழு கி.மீக்கு அப்பால்) தியானம் செய்யும் பொழுது நான் எங்கு இருக்கின்றேன் என்பதையே மறந்தேன் உடலற்றநிலையை பெற்றேன்,

பாறை, மரம், செடி, கொடி, துள்ளி ஓடும் மான், அதை துரத்தும் சிங்கம், நதி, அதன் ஓசையில், அதிலிருக்கும் மீனில், ஆகாயத்தில், நிலவில், அதன் ஒளியில், விடியற்காலை சூரியனில், அதன் ஒளியில், கீழே கிடக்கும் கல்லில், துகளாக போய் உருவான மண்ணில், மண் புழு அதை தின்னும் குருவி, அதை விரட்டி தின்னும் பாம்பு, அதை தூக்கிக்கொண்டு செல்லும் பருந்து, அதை வேட்டையாடும் மனிதன், அவன் கையிலிருக்கும் வில்லில், இன்னும் இன்னும் என்னில் அடங்காதவைகளில்...

சுருக்கமாக சொன்னால் இந்த பிரபஞ்சத்தின் இயக்க இரகசியத்திலிருந்து, சுழியம் வரை நான் கலந்திருப்பதை உணர்ந்தேன்....

நான் பெற்ற அனுபத்தை....

நான் பெற்ற ஞானத்தை...

ஆம் நான் ஞாநியாகிவிட்டேன்... என்ன நம்பிக்கை இல்லையா ?

இருந்து விட்டு போங்க... எனக்கு ஒன்றும் நட்டம் இல்லை...

நீங்க என் குழந்தைகள்.. உங்களை காக்கும் பொறுப்பு என்னுடையது...

அதனால் என் அட்வைசை ஆரம்பிக்கிறேன்.....

இப்படி எல்லாம் சொல்லி நான் யோகி வேசம் போட்டு, பல ஆங்கில புத்தகங்களையும் வேற்று மொழி புத்தகங்களையும், கற்பனை கதைகளையும் சொல்லி கார்பரேட் சாமியாராக விரும்பல.... -:)

பித்தன் என்ற பெயரில் நிறைய நண்பர்கள் பதிவுலகிற்கு வந்துவிட்டதால் [பி]-[த்]-[த]-[ன்] என்று கட்டம் எல்லாம் போட்டு பெயரை மாற்றினேன் இப்படி இருந்தும் பின்னூட்டங்களில் குழப்பம் வருவதால் எனது பெயரை "[ஞான]-[பி]-[த்]-[த]-[ன்]" என்று மாற்றிக்கொண்டேன்

[பி]-[த்]-[த]-[ன்] என்ற நான் இன்று முதல் "[ஞான]-[பி]-[த்]-[த]-[ன்]"

*