நிழலின் நிழல்

*

நிசத்தின் நிழலின்
நிழலில் நிசம்
பகலில் நிசம்
இரவில் நிழல்

பருவமாற்றத்தில்
காணமல்போன
நிழலின் நிசம்

நிசமில்லா நிழலில்
நீங்கமுடியாத
நிழலின் நிழல்

மீதமிருப்பது
நிழலா நிழலின் நிழலா ?
தெரியவில்லை

*

மும்பை - சென்னை - கொல்கத்தா

*

எங்கவூட்டு திண்ணைல குந்திகினிங்க
எங்காத்து விருந்தாளின்னு சொல்லிகினிங்க
எங்கூட்டு சோத்த மொதல தின்னுகினிங்க
இப்ப சப்பாத்திதான் புடிக்குதுன்னு சொல்லிகிரிங்க

கூரையபிறிச்சி மாடியாக கட்டுரனிங்க
உங்களதானே நம்பி என்கூட்ட தந்தோமுங்க
விதவிதமா கட்டி கட்டி வியக்கவச்சிங்க
வீட்டுக்குள்ள நுழையுரப்ப எட்டிவுதக்குறிங்க

எங்கூட்டு சாதிசனம் வந்துனிக்கைல
எடுபுடி வேலைக்கூட எங்களுக்கிள்ளிங்க
என்கூடுதானே என்று எதித்து கேட்டாக்க
தேசியம்ன்னு என்ன என்னம்மோ மிரட்டுறிங்க

என்கவூடு எங்களுக்குன்னு சொல்லக்கூடதாங்க ?
எந்த ஊட்ட என்கவூடுன்னு நாங்கசொல்லுரதுங்க ?
உங்கவுணவ எங்களையும் திங்கசொல்லுரிங்க
என்கவூட்டுலஇருந்துக்கினு அத இன்னாத்துக்கு திங்கோனுங்க. ?

எங்க நீங்க போனாலும் அவங்க மாறோனுமுங்க
நீங்க மட்டும் எப்பொழுதும் மாறமட்டிங்க.
நீங்க கூத்தடிச்சி எங்க கலாச்சாரத்த சிதசிடுவிங்க.
எதுத்து கேட்டா கூடிநின்னு கும்மியடிக்குரிங்க.

இப்பகூட ஒன்னும் கெட்டுப்போகலிங்க
எங்கூட்டுல நல்லா வந்து குந்திகிடுங்க
சோறு போடும் பூமி உணவ தின்னுகிடுங்க பொறவு
நீ வேற நான்வேரன்னு நினைக்கமிடமில்லிங்க.

*

வெண்புறா

*
ஐந்து நிமிடத்தில் தொடரூந்து வரவிருக்க, தொடரூந்தை பிடிக்காவிடில் கிளாங்கில் இறுதி பேருந்து பிடிக்க சிரமமாகிவிடும் என்ற நிலையில், குடிநீர் குடிக்காமல் ஒரு அடிக்கூட நடக்கயியலாது என்று முடிவாக கூறிவிட்டார் முகவைக்கரர், வேறுவழியில்லாமல் குடிநீரை தேடி கே.எல் சென்ட்ரலில் அலைந்தோம், ஒரு வழியாக ஒரு கடையில் குடிநீர் வாங்கி முகவையாருக்கு கொடுத்துவிட்டு அறிவிப்பு பலகையை பார்க்க ஒரு நிமிடத்தில் தொடரூந்து வருவதாக தெரிந்தது. பயணச்சீட்டை எந்திரத்தில் காட்ட எனக்கு வழிகிடைத்தது, ஆனால் ஜெகுக்கும், முகவையாருக்கும் எந்திரம் வழிவிட மறுக்க, காவலர் உதவி புரிந்தார்.

அவசரமாக கீழ்தளத்திற்கு இறங்கி தொடரூந்து அறிவிப்பு பலகையை பார்க்க இருபது நிமிடங்கள் கூட்டப்பட்டிருந்தது. வண்டிக்கு காத்திருந்த அனைவரின் முகத்திலும் ஏமாற்றம். முகவயாரை காண திரும்பிய பொழுது அழகியபாதங்களை ஒவ்வொரு படியாக வைத்து சிறு புன்னகையுடன் மேகத்தை உடையாக அணிந்து ஒரு வெண்புறா வர, கேமரனின் குளிர்காற்று துமியோடு கே.எல் சென்ட்ரல் கே.டிஎம் நடைமேடையில் வீசியது.

தண்ணீ குடிக்கலைனா தலைவலி வரும் என்று தன் பலவருட ஆராச்சியின் முடிவை அந்த நடைமேடையில் வெளியிட்டு தொடர்ந்து பேசினார் முகவையார். ஆனால் எனது எண்ணம்,கவனம் அந்த வெண்புறா எதிர்திசையில் செல்லும் தொடரூந்து மேடைக்கு செல்லக்கூடாது என்றுதான் இருந்தது, அந்த சிறிய பாதங்கள் நாங்கள் காத்திருக்கும் தொடரூந்து நடைமேடையை நோக்கி வந்து எங்களுக்கு சற்று அருகாமையில் நின்றது. தொடரூந்து வருகிறதா இல்லையா என்பதை பார்ப்பது போல அது இருந்த திசையை நோக்கி அடிக்கடி பார்த்தே பதினைந்து நிமிடங்கள் செல்ல, தொடரூந்து வருவதற்கான நேரம் இன்னும் இருபது நிமிடங்கள் கூட்டப்பட்டது, இன்று பேருந்தை பிடிப்பது கடினம்தான் என்று எண்ணினாலும், வெளியில் இருந்தபொழுது ஏற்பட்ட பதட்டம் அப்பொழுது இல்லை, வேகவேகமா கூட்டிட்டு வந்திங்களே இப்ப என்னாச்சி என்று கடிந்துகொண்டார் முகவையார். ஆனால் சில நிமிடங்களிலேயே தொடரூந்து வந்துவிட்டது.

நாங்கள் தொடரூந்தின் கதவை நோக்கி செல்ல முதல் வாயில், வெண்புறாவின் அருகில் இருக்க, நான் அங்கே நின்றுக்கொண்டேன், ஆனால் முகவையாரும் ஜெக்கும் தங்களை வயதானவர்கள் என்று நிரூபிக்க என்னையும் வெண்புறாவையும் தாண்டிச்சென்று அடுத்த வாயிலில் ஏறிக்கொண்டனர். உள்ளே ஏறியதும் ஒரு இருக்கை எனக்கு கிடைக்க மற்ற இருவரும் இருக்கை கிடைக்காமல் என்னை நோக்கி வந்தனர், என்னருகில் இருந்த மற்றொரு இருக்கையில் ஜெக் அமர்ந்துக்கொள்ள முகவையார் நின்றுக்கொண்டு வந்தார், வயதானகாலத்தில் நிக்காதிங்க இங்க அமருங்கள் என்று நான் கூறியும் அவர் அமரவில்லை, அமராததிலும் ஒரு வசதி, இடது கதவோரம் அமர்ந்திருந்த வெண்புறாவை காண சுலபமாக இருந்தது, ஆனால் வெண்புறாவுக்கு அருகில் அமர்ந்திருந்தவர் வெண்புறாவை மறைத்தவாறு இருந்தார், முகவையாரின் மொக்கைகளை கேட்டுக்கொண்டே வெண்புறாவை பார்த்துக்கொண்டே சென்றேன்.

சுபாங் ஜெயாவில் பலர் இறங்க முகவையாருக்கு ஒரு இருக்கை கிட்டியது எங்களை விட்டு சற்று தள்ளி, அதே சமயம் வெண்புறாவின் அருகிலும் ஒரு இருக்கை காலியாக இருந்தது அங்கு சென்று அமர்ந்துவிடலாமா என்று என்னிக்கொண்டிருக்கும் பொழுதே ஒருவர் அங்கு சென்று அமர்ந்தார். அடுத்த நிறுத்தத்தில் என்னருகில் ஒரு இருக்கை காலியாக முகவையாரை அழைத்து என்னருகில் அமர சொன்னோம், முகவையார் வந்தபிறகு இடதுபக்கம் பார்த்தால் வெண்புறாவின் இருக்கை காலியாக இருந்தது, வயதான மனிதரை இங்கு அமரவைக்க போய் வெண்புறாவை விட்டுட்டமே, இப்ப எங்க தேடுறது யார கேக்குறது என்று மனம் என்னக்குள்ளே கேட்டுக்கொண்டது, ஆனால் சிறிது நேரத்தில் வெண்புறா அமர்ந்திருந்த இருக்கைக்கு வலபக்க இருக்கைக்கு பின்னல் வெள்ளையுடை அணிந்த புறா இருப்பது தெரியவர குளிர் தாளாமல் வெண்புறா பறந்து பின்னிருக்கைக்கு சென்றிருக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டோம், ஆனால் தனியாக வந்த வெண்புறா அருகில் அமர்ந்திருக்கும் மலாய் புறாவிடம் பேசிக்கொண்டு வருவதை பார்த்து சற்று சந்தேகம் எழுந்தது, நான் தேடும் வெண்புறாதானா இது என்று சந்தேகம் வர அடுத்த நிறுத்தத்தை பார்ப்பது போல் நடந்து சென்று பார்க்க சரியாக தெரியவில்லை. நாங்கள் வர இருபது நிமிடம் ஆகும் அதற்குள் தொடரூந்து நிறுத்தத்துக்கு வந்துவிடுங்கள் என்று எங்களை கொண்டு வந்து விட்டவருக்கே அழைத்து கூற அவர் நிலையத்திற்கு வந்துவிடுவதாக கூறினார்.

ஆனால் அதற்க்கு அடுத்த நிறுத்தத்தில் வேறு புறா அங்கிருந்து பறந்து செல்ல முகவையாரும், ஜெக்குவும் என்னை ஓட்ட ஆரம்பித்துவிட்டார்கள், வயதானவர் முகவையார் என்று நான் பலமுறை உண்மையை கூறியதற்கு அந்த பெரியவர் அப்பொழுது பழிதீர்த்துக்கொண்டார். போகட்டும் அதில் துளியும் வருத்தமில்லை ஆனால் எப்பொழுது அந்த வெண்புறா பறந்தது என்றுகூட பார்க்கவில்லையே என்ற எண்ணம்தான் என்னை திட்டிக்கொண்டு இருந்தது. புகிட் படாக் கடந்ததும் மூவரும் கதவின் அருகினில் வந்து நின்றோம் அது வெண்புறா அமர்ந்திருந்த இடத்துக்கு மிக அருகில் இருந்தது, முகவையாரும், ஜெக்கும் இன்னும் பலமாக என்னை ஒட்டிக்கொண்டிருன்தனர், கிளாங் நிறுத்தத்தை நெருங்கியவுடன் சிறு புன்னகை மற்றும் பொய் கோபத்தோடு வெண்புறா முன்பு அமர்ந்திருந்த இருக்கைக்கு பின்னாலிருந்து எழுத்து வர மூவரும் மௌனமாகினோம். தமிழ் புறா என்பதால் நாங்கள் பேசிய அனைத்தும் புரிந்திருக்கும் ஆகவே அந்த சிறு புன்னகை மற்றும் பொய் கோபம் புறாவிடமிருந்து.

எங்களை கடந்து வெண்புறா சென்றாலும் பயணசீட்டை எந்திரத்தில் காட்டிவிட்டு நிலையத்தின் வாயிலிலே நின்றுக்கொண்டது, டேக்சிகாரர் வந்திருக்ககூடாது என்று எண்ணிக்கொண்டிருக்கும் பொழுதே தோ வந்துட்டேன் என்பது போல கையை உயர அசைத்தார், வேண்டுமென்றே மெதுவாக திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே டேக்சியை நோக்கி நடக்கம் வெண்புறா இன்னும் நிலையத்தின் வாயிலிலேயே நின்றிருந்தது, வண்டி கிளாங் தொடரூந்து நிலையத்திலிருந்து கிளாங் பேருந்து நிலையத்தை நோக்கிசென்றது.

அப்பொழுதும் வெண்புறா நிலையத்தின் வாயிலில் ஒரு இருக்கையில் அமர்ந்து எங்கேயோ பார்த்துகொண்டிருந்தது.....

குறிப்பு : இந்த ,மொக்கை `ஒரு தமிழனின் குரலு`க்காக கட்டாயத்தின் பெயரில் எழுத்தப்பட்து.