யாமும் போயிற்று

*

அனைத்திலும் யாம்
எம்மிருப்பு உறுதியாயிற்று
ஊனுடலில் யாமில்லை
எமக்கும் ஊனுடலும்மில்லை
சுவாசத்தின் சுவாசமும் யாம்

சதை எலும்புக்கு
மலர்தூவி
எம்மை தொலைத்து
எம்மை நினைப்பீர்

புதுவழி உருவாகி
மூலமாக யாம்
எம் விருப்பமின்றி

அருவத்தின் அருமை
அருமை
புதிய பாடம்
தொடங்கிற்று

யாமை யாமொலித்து
யாமும் போயிற்று

1 comments:

வால்பையன் said...

யாம் டாரியலானோம்!