*
எழுதிவிட வேண்டும்
ஒரு கவிதையேனும்
அல்லது சொற்குவியலில்
ஒன்றை
எதையோ எழுத நினைத்து
எதைப்பற்றியாவது எப்படியாவது
எழுதிவிட வேண்டும்
இரண்டு கவிதைகளையும்
ஒரு கோப்பை தேநீரையும்
காலை உணவாக எடுக்க
நினைத்ததை...
முகமுடிகள் கழற்றிவிட்டு
ஒரு முழுநாள்
இருக்க
நினைத்ததை...
மழலைகளின்
பால்மனத்தையும் சொற்களையும்
சேகரிக்க
நினைத்ததை...
மனம் பிறழ்ந்தவனின்
அருகில் அமர்ந்து
அவனுடன் உரையாட
நினைத்ததை...
இன்னும்... இன்னும்....
நினைத்தது அனைத்தையும்....
சொற்களை தேடி
தேர்ந்தெடுத்து விட்டேன்
மயிலிரகுக்காக காத்திருக்கிறேன்
தானாக உதிருமென்று....
0 comments:
Post a Comment