சில கொலைகளை செய்யவேண்டும் !!!

*

கிறுக்கிக்கொண்டிருக்கும்
நினைவுகளையும்
உணர்வுகளையும்
இரக்கமற்ற எண்ணங்களையும்
முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்

மேலும்

சில கொலைகளை
செய்யவேண்டும்

ஒரு செயலை
ஒரு தவறை
ஒரு மன்னிப்பை

ஆயுதம் கிடைத்தால்
தாராளமாக கொடுங்கள்
உங்களுக்கு சன்மானம்
கொடுக்கப்படும்