இயல்பு !

*
ஒரு
குவளை பாலில்
ஒரு துளி
குருதி

மெல்ல பாலினூடே
சென்று தரையை
தொட முயற்சித்து
முடிந்தளவு
பாலின் நிறத்தை
மாற்றி தரையை
தொடாது பயணம்
முடிந்தது

எதன் பொருட்டும்
வருத்தம் கொள்வது
பிழையாகிவிடும்
இரண்டும்
தன் இயல்பைதானே
வெளிக்காட்டியது...