நான் தொடங்கியது...

*
என்றோ
நான் தொடங்கியது...
முடிந்ததாக
நான் நினைத்தது...

நெடுநாள் சென்று
ஒரு திருநாளில்...

நீங்களே
காற்புள்ளி வைத்தீர்கள்,
நீங்களே
யூகத்தில் தொடர்ந்தீர்கள்...
நீங்களே
என்னை வெறுத்தீர்கள் ...
நீங்களே
முடிவுகளையும் எடுத்தீர்கள்...
நீங்களே
முற்றுபுள்ளி வைக்க நினைத்தீர்கள்...
நீங்களே
நான் முற்றுபுள்ளி வைத்ததாகவும்
நினைத்தீர்கள்..

இதில்
என் பங்கு என்ன ?

*

0 comments: