*
கிறுக்கிக்கொண்டிருக்கும்
நினைவுகளையும்
உணர்வுகளையும்
இரக்கமற்ற எண்ணங்களையும்
முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்
மேலும்
சில கொலைகளை
செய்யவேண்டும்
ஒரு செயலை
ஒரு தவறை
ஒரு மன்னிப்பை
ஆயுதம் கிடைத்தால்
தாராளமாக கொடுங்கள்
உங்களுக்கு சன்மானம்
கொடுக்கப்படும்
எதையாவது எழுத வேண்டும்...
Posted by
வெற்றி-[க்]-கதிரவன்
on Friday, January 14, 2011
*
எழுதிவிட வேண்டும்
ஒரு கவிதையேனும்
அல்லது சொற்குவியலில்
ஒன்றை
எதையோ எழுத நினைத்து
எதைப்பற்றியாவது எப்படியாவது
எழுதிவிட வேண்டும்
இரண்டு கவிதைகளையும்
ஒரு கோப்பை தேநீரையும்
காலை உணவாக எடுக்க
நினைத்ததை...
முகமுடிகள் கழற்றிவிட்டு
ஒரு முழுநாள்
இருக்க
நினைத்ததை...
மழலைகளின்
பால்மனத்தையும் சொற்களையும்
சேகரிக்க
நினைத்ததை...
மனம் பிறழ்ந்தவனின்
அருகில் அமர்ந்து
அவனுடன் உரையாட
நினைத்ததை...
இன்னும்... இன்னும்....
நினைத்தது அனைத்தையும்....
சொற்களை தேடி
தேர்ந்தெடுத்து விட்டேன்
மயிலிரகுக்காக காத்திருக்கிறேன்
தானாக உதிருமென்று....
எழுதிவிட வேண்டும்
ஒரு கவிதையேனும்
அல்லது சொற்குவியலில்
ஒன்றை
எதையோ எழுத நினைத்து
எதைப்பற்றியாவது எப்படியாவது
எழுதிவிட வேண்டும்
இரண்டு கவிதைகளையும்
ஒரு கோப்பை தேநீரையும்
காலை உணவாக எடுக்க
நினைத்ததை...
முகமுடிகள் கழற்றிவிட்டு
ஒரு முழுநாள்
இருக்க
நினைத்ததை...
மழலைகளின்
பால்மனத்தையும் சொற்களையும்
சேகரிக்க
நினைத்ததை...
மனம் பிறழ்ந்தவனின்
அருகில் அமர்ந்து
அவனுடன் உரையாட
நினைத்ததை...
இன்னும்... இன்னும்....
நினைத்தது அனைத்தையும்....
சொற்களை தேடி
தேர்ந்தெடுத்து விட்டேன்
மயிலிரகுக்காக காத்திருக்கிறேன்
தானாக உதிருமென்று....
காலம்தாழ்ந்த பயண`க்குறிப்பு
Posted by
வெற்றி-[க்]-கதிரவன்
on Wednesday, September 29, 2010
*
எல்லையை கடக்கும் முன்பே மழை பொழிய ஆரம்பித்தது, மழையில் பயணம் தொடர்ந்தது, பேருந்து நிலையத்தின் வெளியே இறங்கி அடுத்த பேருந்தில் ஏறிக்கொண்டேன். பயணசீட்டு கொடுக்கவில்லை காசுமட்டும் வாங்கிக்கொண்டார் நடத்துனர் அனைவரிடத்திலும். எங்கும் பார்க்கினும், மரங்கள் , பசுமை என்று அழகாக காட்சிக்கொடுத்து கொண்டிருந்தது பேருந்து சன்னல், ஊர்கள் தோறும் பெரிய வீடுகள் அதை சுற்றி செடிகள் வைப்பதற்கு இடம் என்று அவர்களின் வசதியை காட்டியது, முன்பு பலமுறை வந்திருந்தும் கூர்ந்து கவனிக்க தவறியது இது, சிந்தனைகள் திடமாக இல்லாமல் மாறிக்கொண்டே இருந்தது தடுமாற்றத்திர்க்கான காரணமும் புலப்பட்டது போல தோன்றியது, வெளியில் தெரியும் பெயர் பலகை எழுத்துக்களை எழுத்துக்கூட்டி படிக்க ஆரம்பித்தேன் மிக சிலவற்றை சரியாகவும் படித்ததாக ஆங்கில பெயர்களை வைத்து அறிந்துக்கொண்டேன்.
ஓட்டபாலம் பேருந்து நிலையத்தில் வண்டியை நிறுத்தினார் ஓட்டுனர் பத்து நிமிடங்களுக்கு மேல் நிற்கும் என்று பார்த்தால் இரண்டு நிமிடத்துக்குள்ளே மீண்டும் பேருந்தை இயக்க ஆரம்பித்துவிட்டார், இதே போல் அடுத்த இரண்டு சற்று பெரிய ஊர்களிலும் செய்தார், வெளியில் பார்த்துக்கொண்டே செல்லும்பொழுது சிந்தை எங்கெங்கோ சென்றுக்கொண்டிருந்தது சில நேரம் வெளியே வேடிக்கை பார்ப்பதிலும், சில நேரம் என்னையறியாமல் வந்து சென்ற பழைய பயணங்களிலும் அதன் மூலத்திலும், எழுத்துக்களை கூட்டி படிப்பதிலும் சில நேரம் மௌனமாகவும் அலைகள் போல் வந்துக்கொண்டே இருந்தது. ஊர் வந்தவுடன் பெரும்பாலானோர் முதல் நிறுத்தத்திலேயே இறங்கிக் கொண்டனர் நான் எங்கு இறங்குவது என்று தெரியாமல் யாரையும் கேட்காமலும் வண்டியிலேயே அமர்ந்துக்கொண்டேன். அடுத்த நிறுத்தம் வந்தது, பேருந்து நிலையம் போல் தோன்றியது அங்கே இறங்கி பேருந்து நிலையத்தை விட்டு வெளியே வந்து வலப்பக்கமாக நடக்க தொடங்கினேன்.
சில நிமிடங்களிலே இரண்டு வாரணங்கள் தெரிந்தது, சரியான பாதையில்தான் பயணிக்கிறோம் என்று உறுதிபடுத்தியது. ஊரே விழாக்கோலம் பூண்டிருந்தது, அரிதாரம் பூசியிருந்த பெரியவர்கள், சிறியவர்கள் என அனைவரும் வரிசையாக சென்றுக்கொண்டிருந்தனர்.
கையில் புல்லாங்குழல், நெற்றியில் மயிலிறகு அல்லது கைகளில் சிறு விளக்கு வைத்துக்கொண்டு ஊர்வலம் சென்றனர், சிலர் நடனமாடிக்கொண்டு சென்றனர் அவர்களுக்காக வாத்தியங்களும் இசைக்கப்பட்டது, உரியடி திருவிழாவும் நடந்தது, உரியடி வீரர்கள் மீது தண்ணீர் அடிக்க ஆரம்பித்தவுடன் அவர்களை சுற்றி சிறிய வட்டமாக இருந்த கூட்டம் மெல்ல மெல்ல பெரியவட்டமாக நீண்டுக்கொண்டே சென்றது, பெண்கள் பெரும்பாலும் ஒரே போல் உடை அணிந்திருந்தனர் கரையின் நிறம் மட்டும் வேறு நிறங்களில் இருந்தது , ஆண்களும் அதே போலவே ஒரே மாதரி உடையுடன் வலம்வந்தனர்.
காபி குடிக்க வந்த பாதையிலேயே சற்று பின்செல்லவேண்டி இருந்தது, மீண்டும் திரும்ப கூட்டம் அதிகமாகி இருந்தது, பொருட்களை வைத்துவிட்டு கூடத்தில் நின்றேன், நெடு நேரம் சென்று கூப்பிட்டனர் , கட்டாயம் சட்டையை கழட்டவேண்டும் என்று ஒரு சிறுவன் கூறினான் , அதை செய்தும் பனியனும் கூடாது என்றான் , கழட்டிய பின்னே உள்ளே அனுமதி கிடைத்தது எங்கெங்கோ சென்று தான் உள்ளே செல்ல இயலும் என்று நினைத்தது தவறாக முடிந்தது, உள்ளே நுழையும் பொழுதே வாத்தியங்கள் முழங்க மூன்று வாரணங்கள் நின்றுக்கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது, இன்னும் உள்ளே செல்ல எதையோ அடுப்பில் வைத்து சுட்டுகொண்டிருந்தார்கள் அது குழிபணயாரம் போன்று இருந்தது, அதையும் தாண்டி உள்ளே செல்ல, தூரத்தில் இருந்தே நேராக பார்த்துக்கொண்டு சென்றேன் நெருங்கியதும் சில நொடிகள் கூட நிற்க விடவில்லை, இதை பார்க்கவா இங்கே வந்தேன் என்றால் ஆம் அல்லது அதை காரணமாக வைத்து அந்த இடத்தை பார்க்கவந்தேன் என்றே தோன்றியது, எஞ்சிருந்த நம்பிக்கையை தன்னகத்துள் எடுத்துக்கொண்ட இடம் , அது சரியா தவறா என்று எனக்கு ஆராயும் பக்குவவும் இல்லை ஆனால் இழப்பு இருப்பதாக தோன்றியது, மெதுவாக நடந்து பின்புறம் சென்றேன் எங்கு காணினும் கூட்டமாக இருந்தது, சிறிது நேரம் ஒரு வரிசையில் நின்றேன் நேரம் ஆக, வேண்டாம் என்று கீழே இறங்கி வந்து வாரணங்களை பார்த்துக்கொண்டிருந்தேன்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு இங்கே வந்திருக்க வேண்டும் காலம்தாழ்ந்து வந்ததை மீண்டும் நினைவுகூர்ந்தேன், அந்த பகுதிக்கு பயணம் செய்யவேண்டும் என்று நெடுநாட்களாக தோன்றியதால் மேற்க்கொண்ட பயணம், பல பயணங்கள் ஏமாற்றத்தையும் , பல பயணங்கள் மனநிறைவையும் தந்திருந்தன, இந்த பயணம் ஏமாற்றத்தையும் மனநிறைவையும் ஒருசேர தரும் என்று தெரிந்தே தொடங்கிய பயணம் ஆக இது ஒரு சிறப்புபயனமும் கூட என்று கருதினேன், அந்த இடத்தை விட்டு கிளம்பி பேருந்து நிலையத்தை நோக்கி நடக்க தொடங்கினேன், அடுத்த ஊர் செல்ல பேருந்து தயாராக இருந்தது.
எல்லையை கடக்கும் முன்பே மழை பொழிய ஆரம்பித்தது, மழையில் பயணம் தொடர்ந்தது, பேருந்து நிலையத்தின் வெளியே இறங்கி அடுத்த பேருந்தில் ஏறிக்கொண்டேன். பயணசீட்டு கொடுக்கவில்லை காசுமட்டும் வாங்கிக்கொண்டார் நடத்துனர் அனைவரிடத்திலும். எங்கும் பார்க்கினும், மரங்கள் , பசுமை என்று அழகாக காட்சிக்கொடுத்து கொண்டிருந்தது பேருந்து சன்னல், ஊர்கள் தோறும் பெரிய வீடுகள் அதை சுற்றி செடிகள் வைப்பதற்கு இடம் என்று அவர்களின் வசதியை காட்டியது, முன்பு பலமுறை வந்திருந்தும் கூர்ந்து கவனிக்க தவறியது இது, சிந்தனைகள் திடமாக இல்லாமல் மாறிக்கொண்டே இருந்தது தடுமாற்றத்திர்க்கான காரணமும் புலப்பட்டது போல தோன்றியது, வெளியில் தெரியும் பெயர் பலகை எழுத்துக்களை எழுத்துக்கூட்டி படிக்க ஆரம்பித்தேன் மிக சிலவற்றை சரியாகவும் படித்ததாக ஆங்கில பெயர்களை வைத்து அறிந்துக்கொண்டேன்.
ஓட்டபாலம் பேருந்து நிலையத்தில் வண்டியை நிறுத்தினார் ஓட்டுனர் பத்து நிமிடங்களுக்கு மேல் நிற்கும் என்று பார்த்தால் இரண்டு நிமிடத்துக்குள்ளே மீண்டும் பேருந்தை இயக்க ஆரம்பித்துவிட்டார், இதே போல் அடுத்த இரண்டு சற்று பெரிய ஊர்களிலும் செய்தார், வெளியில் பார்த்துக்கொண்டே செல்லும்பொழுது சிந்தை எங்கெங்கோ சென்றுக்கொண்டிருந்தது சில நேரம் வெளியே வேடிக்கை பார்ப்பதிலும், சில நேரம் என்னையறியாமல் வந்து சென்ற பழைய பயணங்களிலும் அதன் மூலத்திலும், எழுத்துக்களை கூட்டி படிப்பதிலும் சில நேரம் மௌனமாகவும் அலைகள் போல் வந்துக்கொண்டே இருந்தது. ஊர் வந்தவுடன் பெரும்பாலானோர் முதல் நிறுத்தத்திலேயே இறங்கிக் கொண்டனர் நான் எங்கு இறங்குவது என்று தெரியாமல் யாரையும் கேட்காமலும் வண்டியிலேயே அமர்ந்துக்கொண்டேன். அடுத்த நிறுத்தம் வந்தது, பேருந்து நிலையம் போல் தோன்றியது அங்கே இறங்கி பேருந்து நிலையத்தை விட்டு வெளியே வந்து வலப்பக்கமாக நடக்க தொடங்கினேன்.
சில நிமிடங்களிலே இரண்டு வாரணங்கள் தெரிந்தது, சரியான பாதையில்தான் பயணிக்கிறோம் என்று உறுதிபடுத்தியது. ஊரே விழாக்கோலம் பூண்டிருந்தது, அரிதாரம் பூசியிருந்த பெரியவர்கள், சிறியவர்கள் என அனைவரும் வரிசையாக சென்றுக்கொண்டிருந்தனர்.
கையில் புல்லாங்குழல், நெற்றியில் மயிலிறகு அல்லது கைகளில் சிறு விளக்கு வைத்துக்கொண்டு ஊர்வலம் சென்றனர், சிலர் நடனமாடிக்கொண்டு சென்றனர் அவர்களுக்காக வாத்தியங்களும் இசைக்கப்பட்டது, உரியடி திருவிழாவும் நடந்தது, உரியடி வீரர்கள் மீது தண்ணீர் அடிக்க ஆரம்பித்தவுடன் அவர்களை சுற்றி சிறிய வட்டமாக இருந்த கூட்டம் மெல்ல மெல்ல பெரியவட்டமாக நீண்டுக்கொண்டே சென்றது, பெண்கள் பெரும்பாலும் ஒரே போல் உடை அணிந்திருந்தனர் கரையின் நிறம் மட்டும் வேறு நிறங்களில் இருந்தது , ஆண்களும் அதே போலவே ஒரே மாதரி உடையுடன் வலம்வந்தனர்.
காபி குடிக்க வந்த பாதையிலேயே சற்று பின்செல்லவேண்டி இருந்தது, மீண்டும் திரும்ப கூட்டம் அதிகமாகி இருந்தது, பொருட்களை வைத்துவிட்டு கூடத்தில் நின்றேன், நெடு நேரம் சென்று கூப்பிட்டனர் , கட்டாயம் சட்டையை கழட்டவேண்டும் என்று ஒரு சிறுவன் கூறினான் , அதை செய்தும் பனியனும் கூடாது என்றான் , கழட்டிய பின்னே உள்ளே அனுமதி கிடைத்தது எங்கெங்கோ சென்று தான் உள்ளே செல்ல இயலும் என்று நினைத்தது தவறாக முடிந்தது, உள்ளே நுழையும் பொழுதே வாத்தியங்கள் முழங்க மூன்று வாரணங்கள் நின்றுக்கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது, இன்னும் உள்ளே செல்ல எதையோ அடுப்பில் வைத்து சுட்டுகொண்டிருந்தார்கள் அது குழிபணயாரம் போன்று இருந்தது, அதையும் தாண்டி உள்ளே செல்ல, தூரத்தில் இருந்தே நேராக பார்த்துக்கொண்டு சென்றேன் நெருங்கியதும் சில நொடிகள் கூட நிற்க விடவில்லை, இதை பார்க்கவா இங்கே வந்தேன் என்றால் ஆம் அல்லது அதை காரணமாக வைத்து அந்த இடத்தை பார்க்கவந்தேன் என்றே தோன்றியது, எஞ்சிருந்த நம்பிக்கையை தன்னகத்துள் எடுத்துக்கொண்ட இடம் , அது சரியா தவறா என்று எனக்கு ஆராயும் பக்குவவும் இல்லை ஆனால் இழப்பு இருப்பதாக தோன்றியது, மெதுவாக நடந்து பின்புறம் சென்றேன் எங்கு காணினும் கூட்டமாக இருந்தது, சிறிது நேரம் ஒரு வரிசையில் நின்றேன் நேரம் ஆக, வேண்டாம் என்று கீழே இறங்கி வந்து வாரணங்களை பார்த்துக்கொண்டிருந்தேன்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு இங்கே வந்திருக்க வேண்டும் காலம்தாழ்ந்து வந்ததை மீண்டும் நினைவுகூர்ந்தேன், அந்த பகுதிக்கு பயணம் செய்யவேண்டும் என்று நெடுநாட்களாக தோன்றியதால் மேற்க்கொண்ட பயணம், பல பயணங்கள் ஏமாற்றத்தையும் , பல பயணங்கள் மனநிறைவையும் தந்திருந்தன, இந்த பயணம் ஏமாற்றத்தையும் மனநிறைவையும் ஒருசேர தரும் என்று தெரிந்தே தொடங்கிய பயணம் ஆக இது ஒரு சிறப்புபயனமும் கூட என்று கருதினேன், அந்த இடத்தை விட்டு கிளம்பி பேருந்து நிலையத்தை நோக்கி நடக்க தொடங்கினேன், அடுத்த ஊர் செல்ல பேருந்து தயாராக இருந்தது.
வெற்றிடமாகிப்போன கடவுள்
Posted by
வெற்றி-[க்]-கதிரவன்
on Thursday, August 12, 2010
*
இறைத்தன்மையை உணர்த்தி இறை தேடிச்சென்ற பொழுதுகளில் உணரமட்டும் முடிந்து காணயியலாது போன காலங்களில். துணைநின்று பயணத்தை தொடர துணை நின்றது இறை, காண எங்கெங்கோ சென்று நிகழ் மற்றும் இறந்தகாலத்தின் நினைவுகளை கனவுகளை அசைபோட்டு அதை உந்துசக்தியாக்கி இறைத்தேடல் தொடர்ந்தது. இறை என்ற ஒற்றை உணர்வு மட்டும் உண்மையில்லை, இறை மறுப்பு / எதிர்ப்பு கூட உண்மையான உணர்வுதான், என்னை பிடித்துக்கொண்ட அல்லது எனக்கு பிடித்த இறையின் நிழலில் முட்களின் மீது விளைவை புரிந்தும் நடந்து மகிழ்ச்சியில் நாட்கள் நகர்ந்தன.
என்னை முழுவதுமாக ஆக்கரமித்து முற்றிலுமாக குழப்பிவித்து, போதையில் தள்ளி எங்கோ சென்றுக்கொண்டிருந்தது வாழ்க்கை . நற்றுனை என நினைத்த காலமும் துணையின்றி போனது. கனவுதேசத்தின் பிடியில் சிக்கி தத்தளித்துக்கொண்டும். நடுநிசி பயணத்திற்கும் ஒரு குவளை தேநீருக்கும் காலத்தின் பிடியில் அடிமையாக இருந்தேன். தேடலின் துடிப்பில் எங்கோ போய்கொண்டிருக்க. எனக்கும் புரியவில்லை யாரும் இருக்கவில்லை, தனிமையில் என் உலகத்தை ஆட்சி செய்துகொண்டிருக்க. காலத்தின் பிடி தளர்ந்து அதன் கால்களால் உதைக்கப்பட்டு கனவுகளை மட்டும் சுமந்து எங்கோ நகர்ந்துகொண்டிருந்தது என் எண்ணங்கள்.
இன்னும் தேடல் பலமடங்கு அதிகரிக்க, சீவன் எங்கோ செல்ல இறை என்னுடனே அடங்கிவிட்டது, சீவனை காணும் முயற்ச்சிக்கு தடைசெய்த மனதில் சீவனின் நினைவுகள் பூட்டி வைக்கப்பட்டிருந்தது. நினைவுகளை சிதறவிடாது ஆவணபடுத்தும் முயற்ச்சியில் இறங்கியது மனது. சீவனுக்கும் இறைக்கும் தொடர்பு இருப்பது உண்மை, இறவனைக்கொண்டு சீவனை நோக்கும்பொழுது இறையைவிட மேன்மைக்கொண்டதாக விளங்கும், இறையை இயன்றளவு கட்டிக்கொண்டு செல்ல, பயண காலத்தின் அளவு கூட கட்டில் தளர்வு விரிவடைந்துக்கொண்டே செல்ல, இறை இல்லாமல் போனதற்கான அறிகுறிகள் தென்படும். மகிழ்ச்சியில் பயணம் தொடர ஆழ்மனதில் அடைக்கப்பட்டு வைத்திருக்கும் இறை காலம் தோதாக இருக்கும்பொழுது அவ்வபோது உணர்த்திவிட்டு செல்லும்/ சொல்லும் சில நிமிடங்கள் தன்னை மறந்து இறையின் மடியில் ஊஞ்சலாடிக்கொண்டிருக்கும் மனது.
நிமிடங்கள் கரைவில் இறையின் சுவடுகள் வெற்றிடமாகி போகும். வெற்றிடத்தின் பிடியில் சிக்கி கால்கள் தானாக நடிநிசி பயணத்தை தொடரும், ஒரு கோப்பை தேநீரும் அதற்க்கு துணைநிற்கும். வெற்றிடமாகிப்போன கடவுளின் பிடியில் மனது சிக்கி நிற்க, சீவனை காண மனது ஏங்கி நிற்கும்.
இறைத்தன்மையை உணர்த்தி இறை தேடிச்சென்ற பொழுதுகளில் உணரமட்டும் முடிந்து காணயியலாது போன காலங்களில். துணைநின்று பயணத்தை தொடர துணை நின்றது இறை, காண எங்கெங்கோ சென்று நிகழ் மற்றும் இறந்தகாலத்தின் நினைவுகளை கனவுகளை அசைபோட்டு அதை உந்துசக்தியாக்கி இறைத்தேடல் தொடர்ந்தது. இறை என்ற ஒற்றை உணர்வு மட்டும் உண்மையில்லை, இறை மறுப்பு / எதிர்ப்பு கூட உண்மையான உணர்வுதான், என்னை பிடித்துக்கொண்ட அல்லது எனக்கு பிடித்த இறையின் நிழலில் முட்களின் மீது விளைவை புரிந்தும் நடந்து மகிழ்ச்சியில் நாட்கள் நகர்ந்தன.
என்னை முழுவதுமாக ஆக்கரமித்து முற்றிலுமாக குழப்பிவித்து, போதையில் தள்ளி எங்கோ சென்றுக்கொண்டிருந்தது வாழ்க்கை . நற்றுனை என நினைத்த காலமும் துணையின்றி போனது. கனவுதேசத்தின் பிடியில் சிக்கி தத்தளித்துக்கொண்டும். நடுநிசி பயணத்திற்கும் ஒரு குவளை தேநீருக்கும் காலத்தின் பிடியில் அடிமையாக இருந்தேன். தேடலின் துடிப்பில் எங்கோ போய்கொண்டிருக்க. எனக்கும் புரியவில்லை யாரும் இருக்கவில்லை, தனிமையில் என் உலகத்தை ஆட்சி செய்துகொண்டிருக்க. காலத்தின் பிடி தளர்ந்து அதன் கால்களால் உதைக்கப்பட்டு கனவுகளை மட்டும் சுமந்து எங்கோ நகர்ந்துகொண்டிருந்தது என் எண்ணங்கள்.
இன்னும் தேடல் பலமடங்கு அதிகரிக்க, சீவன் எங்கோ செல்ல இறை என்னுடனே அடங்கிவிட்டது, சீவனை காணும் முயற்ச்சிக்கு தடைசெய்த மனதில் சீவனின் நினைவுகள் பூட்டி வைக்கப்பட்டிருந்தது. நினைவுகளை சிதறவிடாது ஆவணபடுத்தும் முயற்ச்சியில் இறங்கியது மனது. சீவனுக்கும் இறைக்கும் தொடர்பு இருப்பது உண்மை, இறவனைக்கொண்டு சீவனை நோக்கும்பொழுது இறையைவிட மேன்மைக்கொண்டதாக விளங்கும், இறையை இயன்றளவு கட்டிக்கொண்டு செல்ல, பயண காலத்தின் அளவு கூட கட்டில் தளர்வு விரிவடைந்துக்கொண்டே செல்ல, இறை இல்லாமல் போனதற்கான அறிகுறிகள் தென்படும். மகிழ்ச்சியில் பயணம் தொடர ஆழ்மனதில் அடைக்கப்பட்டு வைத்திருக்கும் இறை காலம் தோதாக இருக்கும்பொழுது அவ்வபோது உணர்த்திவிட்டு செல்லும்/ சொல்லும் சில நிமிடங்கள் தன்னை மறந்து இறையின் மடியில் ஊஞ்சலாடிக்கொண்டிருக்கும் மனது.
நிமிடங்கள் கரைவில் இறையின் சுவடுகள் வெற்றிடமாகி போகும். வெற்றிடத்தின் பிடியில் சிக்கி கால்கள் தானாக நடிநிசி பயணத்தை தொடரும், ஒரு கோப்பை தேநீரும் அதற்க்கு துணைநிற்கும். வெற்றிடமாகிப்போன கடவுளின் பிடியில் மனது சிக்கி நிற்க, சீவனை காண மனது ஏங்கி நிற்கும்.
காட்சிப்பிழை
Posted by
வெற்றி-[க்]-கதிரவன்
on Wednesday, June 30, 2010
தேடலை விடுத்தேன்
கிடைத்தும் கிடைக்காது போன
என் கனவு தேசம்
-*-
எட்டிவிடும் தூரம்
இருந்தும் மனமில்லை
முகவரி தொலைத்த
நினைவுகளால்
-*-
நினைவு மங்கி கிடக்கிறது
கடக்க மறுக்கும்
கால்களுக்கு இன்னும்
தெரிகிறது.
-*-
இன்பமான துன்பத்தின்
இறகு முளைக்காத
நினைவுகளின்
ஊர்வலம்
எனக்கென்ன
நான் பார்வையாளன்
வெறும் பார்வையாளன்
இனியொரு ஊர்வலத்தை
கானயியலாத பார்வையாளன்
-*-
காட்சிகளை பிழையாக்கி
வெற்றிக்களைப்பில் சென்ற
காலங்களில்
தேடிப்பார்த்தும் கிடைக்கா
இனிமை
-*-
யாமும் போயிற்று
Posted by
வெற்றி-[க்]-கதிரவன்
on Thursday, April 1, 2010
*
அனைத்திலும் யாம்
எம்மிருப்பு உறுதியாயிற்று
ஊனுடலில் யாமில்லை
எமக்கும் ஊனுடலும்மில்லை
சுவாசத்தின் சுவாசமும் யாம்
சதை எலும்புக்கு
மலர்தூவி
எம்மை தொலைத்து
எம்மை நினைப்பீர்
புதுவழி உருவாகி
மூலமாக யாம்
எம் விருப்பமின்றி
அருவத்தின் அருமை
அருமை
புதிய பாடம்
தொடங்கிற்று
யாமை யாமொலித்து
யாமும் போயிற்று
அனைத்திலும் யாம்
எம்மிருப்பு உறுதியாயிற்று
ஊனுடலில் யாமில்லை
எமக்கும் ஊனுடலும்மில்லை
சுவாசத்தின் சுவாசமும் யாம்
சதை எலும்புக்கு
மலர்தூவி
எம்மை தொலைத்து
எம்மை நினைப்பீர்
புதுவழி உருவாகி
மூலமாக யாம்
எம் விருப்பமின்றி
அருவத்தின் அருமை
அருமை
புதிய பாடம்
தொடங்கிற்று
யாமை யாமொலித்து
யாமும் போயிற்று
மீண்டும் ஒரு மழைக்காலம்...
Posted by
வெற்றி-[க்]-கதிரவன்
on Tuesday, March 30, 2010
*
தோணிற்று அவ்வாறு தோனுமென்று, தனித்து சென்றால் தாளாது என்று பல விழிகளின் நடுவில் விழிகள், தோணியது நிரூபிக்க கூட்டம் சரிதானென்று சாதித்த நானின் நான். பின்னிரவு தேநீரகத்தை நோக்கிய கால்கள். விழி மூடவிடா உதவிய இமைகள், எதோ மாற்றங்கள் புரியவில்லை நாட்களின் கடத்தலில் சுருதி குறைந்திருக்கும் என்ற எண்ணம் தவறியதை உணர்த்திய நிலவு, மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே பிடித்ததினால் கேட்காது பிடிப்பதினால் பிடித்திருக்க செய்தது, மீண்டும் பார்க்க மனம் உந்த. சில திங்களுக்குள்ளே தனிமையில். மழைகாலத்தில் நடுநிசியில் வீட்டை நோக்கி நடக்க மறுத்த கால்கள், தேநீரகத்தை நோக்கி நடந்தது.
மறந்துவிட்ட அல்லது மறைத்துவைத்த சாட்சியங்கள், தோண்டியெடுக்க நேரம் அமைந்து, மகிழ்ச்சியின் நடுவில் எதிர்வினையாற்றிய மனது. சிலவரிகளின் நினைவில் சில்லிட்ட மனது, எங்கோ எதோ ஒரு உணர்வு, சிலநொடிகளிலே ஊனில் எங்கெங்கோ பயணித்திருக்க, உணர்வை மொழியாய் குணரும் முயற்ச்சியில் தோற்ற தோல்விகள். அதிர்வுகளின் ஆழத்தில் புதைந்திருக்கும் வித்துக்களை மீண்டும் காண மனம் உந்தி வித்துக்கள் சில தினங்கள் வானவில்லாக பயணித்தது, எங்கோ வசந்தகாலத்தில் ஆரம்பித்த மழைக்காலத்தின் சுவடுகள் ஆங்காங்கே சிறு செடியில் கீறல்களாய் மரமாய் வளர்ந்த பிறகும் தெரிந்த சாட்சியம். சாட்சிகள் காலவெள்ளத்தில் கரைந்துவிடுவதில்லை, மூழ்கித்தான் செல்கிறது அதன் ஆழத்தை தொட உந்துதல் கிட்டும்பொழுது சாமர்த்தியத்தாலும் தப்பிக்கயியலாது.
எது துவங்கி வைக்கிறது என்று தெரியவில்லை, யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை, தெரிந்திருந்தால் ஊனுள்ளே ஓரதிர்வும் உருவாகா, ஒத்திசைகள் நேருகின்றது சில சமயம் நேரெதிர் திசைகளில் பயணிக்கிறது, காலங்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்ட உணர்வுகளின் சங்கமம்தான் ஆழ்கடலின் ஆழத்தை ஒத்து புதைந்திருக்க காரணகர்த்தா. தொடக்கத்தில் வெளிகுனரும் முயற்சிகள் வெற்றிப்பெற்று போக போக தோல்விகள் சரியான சாதக நிலை எட்டாத வரை எட்டினாலும் சிலதிங்கள் மருவி சிலமணித்துளிகள் என்று கரைந்துவிடுகிறது. பொய்யின் சங்கமிப்பு என்று முடிவிடும் தருவாயிலும் மௌனமே மிஞ்சும், எதிர்பாரா தருணம் எங்கென்று பாராது தோன்றும். பதிலிராது நமக்கு. பதிலை பார்த்து வருவதில்லை ஆனால் நமக்குத்தான் புரிவதில்லை.
வலுவுள்ளவரை அல்லது வரும்வரை வரட்டும் எதிர்கொள்ளத்தயார் என்றுரைத்தாலும். முற்றிலும் என்னைவிட்டு விலகிவிடு அல்லது முழுவதுமாக என்னை ஆட்கொண்டுவிடு ஆட்கொள்வது என்பதும் அழித்துவிடு என்பதும் ஒன்றுதான், எதிர்திசை பதில்கள்தான். காத்திருந்த பொழுதுகளில் துளிகளின் சத்தமோ அல்லது இசையோ கேட்கவில்லை. இனி வரும்பொழுது கேட்கருக்கிறேன் முடிவான பதிலொன்றை, பதிலிராது என்று தெரிந்தும்.
காத்திருக்கிறேன்..
மீண்டும் ஒரு மழைக்காலத்திற்காக.....
தோணிற்று அவ்வாறு தோனுமென்று, தனித்து சென்றால் தாளாது என்று பல விழிகளின் நடுவில் விழிகள், தோணியது நிரூபிக்க கூட்டம் சரிதானென்று சாதித்த நானின் நான். பின்னிரவு தேநீரகத்தை நோக்கிய கால்கள். விழி மூடவிடா உதவிய இமைகள், எதோ மாற்றங்கள் புரியவில்லை நாட்களின் கடத்தலில் சுருதி குறைந்திருக்கும் என்ற எண்ணம் தவறியதை உணர்த்திய நிலவு, மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே பிடித்ததினால் கேட்காது பிடிப்பதினால் பிடித்திருக்க செய்தது, மீண்டும் பார்க்க மனம் உந்த. சில திங்களுக்குள்ளே தனிமையில். மழைகாலத்தில் நடுநிசியில் வீட்டை நோக்கி நடக்க மறுத்த கால்கள், தேநீரகத்தை நோக்கி நடந்தது.
மறந்துவிட்ட அல்லது மறைத்துவைத்த சாட்சியங்கள், தோண்டியெடுக்க நேரம் அமைந்து, மகிழ்ச்சியின் நடுவில் எதிர்வினையாற்றிய மனது. சிலவரிகளின் நினைவில் சில்லிட்ட மனது, எங்கோ எதோ ஒரு உணர்வு, சிலநொடிகளிலே ஊனில் எங்கெங்கோ பயணித்திருக்க, உணர்வை மொழியாய் குணரும் முயற்ச்சியில் தோற்ற தோல்விகள். அதிர்வுகளின் ஆழத்தில் புதைந்திருக்கும் வித்துக்களை மீண்டும் காண மனம் உந்தி வித்துக்கள் சில தினங்கள் வானவில்லாக பயணித்தது, எங்கோ வசந்தகாலத்தில் ஆரம்பித்த மழைக்காலத்தின் சுவடுகள் ஆங்காங்கே சிறு செடியில் கீறல்களாய் மரமாய் வளர்ந்த பிறகும் தெரிந்த சாட்சியம். சாட்சிகள் காலவெள்ளத்தில் கரைந்துவிடுவதில்லை, மூழ்கித்தான் செல்கிறது அதன் ஆழத்தை தொட உந்துதல் கிட்டும்பொழுது சாமர்த்தியத்தாலும் தப்பிக்கயியலாது.
எது துவங்கி வைக்கிறது என்று தெரியவில்லை, யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை, தெரிந்திருந்தால் ஊனுள்ளே ஓரதிர்வும் உருவாகா, ஒத்திசைகள் நேருகின்றது சில சமயம் நேரெதிர் திசைகளில் பயணிக்கிறது, காலங்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்ட உணர்வுகளின் சங்கமம்தான் ஆழ்கடலின் ஆழத்தை ஒத்து புதைந்திருக்க காரணகர்த்தா. தொடக்கத்தில் வெளிகுனரும் முயற்சிகள் வெற்றிப்பெற்று போக போக தோல்விகள் சரியான சாதக நிலை எட்டாத வரை எட்டினாலும் சிலதிங்கள் மருவி சிலமணித்துளிகள் என்று கரைந்துவிடுகிறது. பொய்யின் சங்கமிப்பு என்று முடிவிடும் தருவாயிலும் மௌனமே மிஞ்சும், எதிர்பாரா தருணம் எங்கென்று பாராது தோன்றும். பதிலிராது நமக்கு. பதிலை பார்த்து வருவதில்லை ஆனால் நமக்குத்தான் புரிவதில்லை.
வலுவுள்ளவரை அல்லது வரும்வரை வரட்டும் எதிர்கொள்ளத்தயார் என்றுரைத்தாலும். முற்றிலும் என்னைவிட்டு விலகிவிடு அல்லது முழுவதுமாக என்னை ஆட்கொண்டுவிடு ஆட்கொள்வது என்பதும் அழித்துவிடு என்பதும் ஒன்றுதான், எதிர்திசை பதில்கள்தான். காத்திருந்த பொழுதுகளில் துளிகளின் சத்தமோ அல்லது இசையோ கேட்கவில்லை. இனி வரும்பொழுது கேட்கருக்கிறேன் முடிவான பதிலொன்றை, பதிலிராது என்று தெரிந்தும்.
காத்திருக்கிறேன்..
மீண்டும் ஒரு மழைக்காலத்திற்காக.....
