காட்சிப்பிழை


தேடலை விடுத்தேன்
கிடைத்தும் கிடைக்காது போன
என் கனவு தேசம்


-*-

எட்டிவிடும் தூரம்
இருந்தும் மனமில்லை
முகவரி தொலைத்த
நினைவுகளால்

-*-

நினைவு மங்கி கிடக்கிறது
கடக்க மறுக்கும்
கால்களுக்கு இன்னும்
தெரிகிறது.


-*-

இன்பமான துன்பத்தின்
இறகு முளைக்காத
நினைவுகளின்
ஊர்வலம்
எனக்கென்ன
நான் பார்வையாளன்
வெறும் பார்வையாளன்
இனியொரு ஊர்வலத்தை
கானயியலாத பார்வையாளன்


-*-

காட்சிகளை பிழையாக்கி
வெற்றிக்களைப்பில் சென்ற
காலங்களில்
தேடிப்பார்த்தும் கிடைக்கா
இனிமை

-*-

யாமும் போயிற்று

*

அனைத்திலும் யாம்
எம்மிருப்பு உறுதியாயிற்று
ஊனுடலில் யாமில்லை
எமக்கும் ஊனுடலும்மில்லை
சுவாசத்தின் சுவாசமும் யாம்

சதை எலும்புக்கு
மலர்தூவி
எம்மை தொலைத்து
எம்மை நினைப்பீர்

புதுவழி உருவாகி
மூலமாக யாம்
எம் விருப்பமின்றி

அருவத்தின் அருமை
அருமை
புதிய பாடம்
தொடங்கிற்று

யாமை யாமொலித்து
யாமும் போயிற்று

மீண்டும் ஒரு மழைக்காலம்...

*

தோணிற்று அவ்வாறு தோனுமென்று, தனித்து சென்றால் தாளாது என்று பல விழிகளின் நடுவில் விழிகள், தோணியது நிரூபிக்க கூட்டம் சரிதானென்று சாதித்த நானின் நான். பின்னிரவு தேநீரகத்தை நோக்கிய கால்கள். விழி மூடவிடா உதவிய இமைகள், எதோ மாற்றங்கள் புரியவில்லை நாட்களின் கடத்தலில் சுருதி குறைந்திருக்கும் என்ற எண்ணம் தவறியதை உணர்த்திய நிலவு, மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே பிடித்ததினால் கேட்காது பிடிப்பதினால் பிடித்திருக்க செய்தது, மீண்டும் பார்க்க மனம் உந்த. சில திங்களுக்குள்ளே தனிமையில். மழைகாலத்தில் நடுநிசியில் வீட்டை நோக்கி நடக்க மறுத்த கால்கள், தேநீரகத்தை நோக்கி நடந்தது.

மறந்துவிட்ட அல்லது மறைத்துவைத்த சாட்சியங்கள், தோண்டியெடுக்க நேரம் அமைந்து, மகிழ்ச்சியின் நடுவில் எதிர்வினையாற்றிய மனது. சிலவரிகளின் நினைவில் சில்லிட்ட மனது, எங்கோ எதோ ஒரு உணர்வு, சிலநொடிகளிலே ஊனில் எங்கெங்கோ பயணித்திருக்க, உணர்வை மொழியாய் குணரும் முயற்ச்சியில் தோற்ற தோல்விகள். அதிர்வுகளின் ஆழத்தில் புதைந்திருக்கும் வித்துக்களை மீண்டும் காண மனம் உந்தி வித்துக்கள் சில தினங்கள் வானவில்லாக பயணித்தது, எங்கோ வசந்தகாலத்தில் ஆரம்பித்த மழைக்காலத்தின் சுவடுகள் ஆங்காங்கே சிறு செடியில் கீறல்களாய் மரமாய் வளர்ந்த பிறகும் தெரிந்த சாட்சியம். சாட்சிகள் காலவெள்ளத்தில் கரைந்துவிடுவதில்லை, மூழ்கித்தான் செல்கிறது அதன் ஆழத்தை தொட உந்துதல் கிட்டும்பொழுது சாமர்த்தியத்தாலும் தப்பிக்கயியலாது.

எது துவங்கி வைக்கிறது என்று தெரியவில்லை, யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை, தெரிந்திருந்தால் ஊனுள்ளே ஓரதிர்வும் உருவாகா, ஒத்திசைகள் நேருகின்றது சில சமயம் நேரெதிர் திசைகளில் பயணிக்கிறது, காலங்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்ட உணர்வுகளின் சங்கமம்தான் ஆழ்கடலின் ஆழத்தை ஒத்து புதைந்திருக்க காரணகர்த்தா. தொடக்கத்தில் வெளிகுனரும் முயற்சிகள் வெற்றிப்பெற்று போக போக தோல்விகள் சரியான சாதக நிலை எட்டாத வரை எட்டினாலும் சிலதிங்கள் மருவி சிலமணித்துளிகள் என்று கரைந்துவிடுகிறது. பொய்யின் சங்கமிப்பு என்று முடிவிடும் தருவாயிலும் மௌனமே மிஞ்சும், எதிர்பாரா தருணம் எங்கென்று பாராது தோன்றும். பதிலிராது நமக்கு. பதிலை பார்த்து வருவதில்லை ஆனால் நமக்குத்தான் புரிவதில்லை.

வலுவுள்ளவரை அல்லது வரும்வரை வரட்டும் எதிர்கொள்ளத்தயார் என்றுரைத்தாலும். முற்றிலும் என்னைவிட்டு விலகிவிடு அல்லது முழுவதுமாக என்னை ஆட்கொண்டுவிடு ஆட்கொள்வது என்பதும் அழித்துவிடு என்பதும் ஒன்றுதான், எதிர்திசை பதில்கள்தான். காத்திருந்த பொழுதுகளில் துளிகளின் சத்தமோ அல்லது இசையோ கேட்கவில்லை. இனி வரும்பொழுது கேட்கருக்கிறேன் முடிவான பதிலொன்றை, பதிலிராது என்று தெரிந்தும்.

காத்திருக்கிறேன்..


மீண்டும் ஒரு மழைக்காலத்திற்காக.....

இரவல் கனவுகளின் வெற்றி

*

பொதியாய் பல வருடங்கள்
சுமந்த
என் கனவுகள்

இரவல்
கனவுகளுக்காக
பொறியியல்

ஆசை கனவுக்காக
தூக்கி எறியப்பட்ட
பொதி

இரவல் கனவுகள்
பெற்ற வெற்றி

ஆசைக்கனவுகள்
இன்று பொதியாய்

என் அனைத்து கனவுகளையும்
இழந்துவிட்டு
அனாதையாக நான்

கால்கள் போனப்பாதை

*

கால்கள் போனப்பாதையில் நடக்கையில். சொர்கத்தின் வாசலாக காண்பித்து நரகத்திற்கு வழி இருந்தது, வழி எங்கே செல்கிறது என்று பார்க்க பயணம் தொடர்ந்தது புதுவித உணர்வு புதுவித அனுபவம் சுகமாகவும் இருந்தது. சொர்க்கம் தெரிவதுபோல் கானல்நீராக தொடர்பயணம். ஒரு கட்டத்தில் பயணத்தை நிறுத்தி திரும்ப தோன்றும் மறுகணமே வேண்டாம் வந்தது வந்தாதகிவிட்டது முடிவையும் காண்போம் என்று தோன்றும். மனபோராட்டங்களுக்கு இடையில் பயணம் இனிதே தொடர்ந்தது. தொடக்கத்தில் பசுமையான தேசத்திற்குள் செல்ல. மனம் பரவசபட்டது வந்தது சரிதான் என்ற மனம் கூறிக்கொண்டது தொடர்ந்து செல்ல பசுமை சிறிது சிறிதாக மறைந்து தொடரோட்டம் போல் தோன்றியது. ஒவ்வொரு தருணத்திலும் ஒவ்வொரு அனுபவம் சரியோ தவறோ அனுபவம் மிஞ்சும். அனுபவத்தை வைத்து என்ன செய்வது ? மீண்டும் ஒரு பயணம் ? வேண்டாம் இதுவே போதும் இன்னும் முடிவே தெரியவில்லை இன்னும் இந்த உடலில் உள்ளத்தில் உந்துதல் இருக்கும் வரை தொடரட்டும் என்று தொடர்ந்தது.

முடிவரியா பயணம் தொடங்கி முடிவை முடிவுசெய்து பிறகு தவறென திருத்தி எழுதி இந்த பயணம் தொடர்கிறது. எதற்க்காக இந்த பயணம் ? எதோ தோனிற்று தொடங்கினேன் இதோ செல்கிறது, முடிவு செய்து தொடங்கவில்லை ஆனால் முடிவு தெரிந்து தொடர்ந்தேன். பயனற்ற பயணத்தில் பயண நேரம் வீணோ என்று தோன்றவில்லை. உண்மையான வாழ்க்கையை சந்திக்க முன்கூட்டியே தனிவகுப்பாக அந்த பயணம், மழைக்காலத்து நடுநிசி பயணம், இதமான குளிர் ஒரு தேநீருக்காக ஏங்கியது. தொடர்ந்தது சிலகாலம், வானிலை மாற்றத்தில் தொலைந்தது பொருள், உணர்வற்ற தேநீர் உயிரற்ற குளிர் இதற்க்காக நான் ஏன் பயணத்தை தொடரவேண்டும். அழகு சொற்க்களை நிரப்பி பொருளில்லா பாடல் எழுதுவதுபோல தொடர எனக்கு விருப்பமில்லை அல்லது பொருளற்ற பயணத்தில் எது நிறைவு ? பயணம் முடிந்துவிட்டதாக நான் அறிவிக்கவில்லை ஒரு காற்புள்ளி மட்டுமே வைத்துள்ளேன் அதற்க்கு தொடரும் என்று அர்த்தமாகாது முடிவு என்றும் அர்த்தமாகாது. அது அப்படியே இருக்கட்டும் முடியா தொடர்போல,

நிழலின் நிழல்

*

நிசத்தின் நிழலின்
நிழலில் நிசம்
பகலில் நிசம்
இரவில் நிழல்

பருவமாற்றத்தில்
காணமல்போன
நிழலின் நிசம்

நிசமில்லா நிழலில்
நீங்கமுடியாத
நிழலின் நிழல்

மீதமிருப்பது
நிழலா நிழலின் நிழலா ?
தெரியவில்லை

*

மும்பை - சென்னை - கொல்கத்தா

*

எங்கவூட்டு திண்ணைல குந்திகினிங்க
எங்காத்து விருந்தாளின்னு சொல்லிகினிங்க
எங்கூட்டு சோத்த மொதல தின்னுகினிங்க
இப்ப சப்பாத்திதான் புடிக்குதுன்னு சொல்லிகிரிங்க

கூரையபிறிச்சி மாடியாக கட்டுரனிங்க
உங்களதானே நம்பி என்கூட்ட தந்தோமுங்க
விதவிதமா கட்டி கட்டி வியக்கவச்சிங்க
வீட்டுக்குள்ள நுழையுரப்ப எட்டிவுதக்குறிங்க

எங்கூட்டு சாதிசனம் வந்துனிக்கைல
எடுபுடி வேலைக்கூட எங்களுக்கிள்ளிங்க
என்கூடுதானே என்று எதித்து கேட்டாக்க
தேசியம்ன்னு என்ன என்னம்மோ மிரட்டுறிங்க

என்கவூடு எங்களுக்குன்னு சொல்லக்கூடதாங்க ?
எந்த ஊட்ட என்கவூடுன்னு நாங்கசொல்லுரதுங்க ?
உங்கவுணவ எங்களையும் திங்கசொல்லுரிங்க
என்கவூட்டுலஇருந்துக்கினு அத இன்னாத்துக்கு திங்கோனுங்க. ?

எங்க நீங்க போனாலும் அவங்க மாறோனுமுங்க
நீங்க மட்டும் எப்பொழுதும் மாறமட்டிங்க.
நீங்க கூத்தடிச்சி எங்க கலாச்சாரத்த சிதசிடுவிங்க.
எதுத்து கேட்டா கூடிநின்னு கும்மியடிக்குரிங்க.

இப்பகூட ஒன்னும் கெட்டுப்போகலிங்க
எங்கூட்டுல நல்லா வந்து குந்திகிடுங்க
சோறு போடும் பூமி உணவ தின்னுகிடுங்க பொறவு
நீ வேற நான்வேரன்னு நினைக்கமிடமில்லிங்க.

*